பகவத்கீதை சனாதன நூலான பகவத்கீதையைத் தவிர எந்த ஒரு மதமும் தங்களது மத நூலை இவர்கள்தான் வாசிக்கனும் இவர்கள் வாசிக்கக் கூடாது எனக் கூறியதில்லை. கீதா-தத்வவிவேசனி (கீதாபிரஸ்-கோரக்பூர்)உள்ள விளக்க உரை; பகவான் கீதையின் உபதேசத்தை நிறைவு செய்து,இனி அந்த உபதேசத்தைக் கற்பித்து,கற்பது முதலியவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டு,முதலில் தகுதியற்றவர்களின் இலக்கணங்களைக் கூறி,அவர்களுக்கு கீதோபதேசம் செய்யக் கூடாது என்கிறார்- इदं नातपस्काय नाभक्ताय कदाचन । न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७॥ இதம் தே நாதபஸ்காய நாப க்தாய கதா சந I ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோகப் யஸூயதி II 67 உனக்குக் கூறப்பட்ட இந்த ரஸஸ்யமான கீதோபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. பக்தியில்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ அவனுக்கு ஒருபொழுதும் சொல்லக்கூடாது. -கீதா தத்வவிவேசனீ,அத்18.67-கீதா பிரஸ் இதை யாருக்கு போதிக்கலாம்? அவருக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மாளிப்பதற்காக,நான்கு வகையான மாசு உள்ளவர்களுக்கு உபதேசம்