நரகத்தில் எனை தள்ளி, பவ்வியமாய் சொர்க்கத்தில் மிதந்துருளும் என்கணவா! ஆசை இன்றியே ,முரட்டு காமத்திற்கு எத்தனை தடவை இனங்கிஇருப்பேன் ஆசைகளை எல்லாம் துறந்தேன் சத்தியமாய் சொல்லுகிறேன் மார்கழி மாத இரவிலும் நித்திரைக்கு பயப்படுகிறேன் மன்னவன் தலை குனிந்தே வருவான் முத்தத்தால் நனையவேண்டிய முந்தானையில் மலக்கிடங்கை ஊரெல்லாம் சுமந்து வந்து என் முதுகிலே கொப்பளிப்பான் மல்லிகையும் மணம் நொந்து போகும் அளவுக்கு வாசனையும் தருவான் . அனேக நேரங்களில் , மனைவியையே பலாத்காரம் செய்த முதல் கணவன் நீயாகத்தான் இருக்க முடியும் . பல முறை சொல்லியும் எனது மூக்கும் கேட்டகவில்லை உனது வாயும் கேட்க்கவில்லை புல் (ஆல்கஹால் )ஆனாலும் புருஷன் என மாற்றிக்கொண்டேன்!