மனிதனாய் பிறந்த அத்துனைபேருக்கும் ஏதாவதுஒரு தருனத்தில் போழுது விடிகையில் அல்லது கரைந்து விழுகையில் ஒரு கவிதையின் முகம், கவிதையின் தடமாவது முன்னே விரிந்து சுருங்கி போய்இருக்கும், வெந்தரையில் இல்லாத முந்திரி தோப்பை கொண்டுவரும் மாயவித்தை, பார்க்காத காதலியை ஆடைக்குள் அமிழ்த்தி வைக்கும் திறமை என கவிதையின் முகம் அகன்டது. கவிதைகளுக்கெல்லாம் அழகும் அசிங்கமும் உண்டாயென்றால் வினாதான் முளைக்கிறது, சில கவிதைகள் மூக்கும் முழியுமாக பூவும் பொட்டும், புனைவும் டையும் சூவும் வைத்து அலங்கரிக்கப ்படும். இலக்கியங்களில் சந்தம் சாரியை தொடை தளை ஓசை என மொழியை உருட்டி திரட்டி முகசாயமெல்லாம் பூசி வைக்கப்பட்டிருக்கும், தேவையா தேவையில்லையா என்பதை விட, எந்தமாதிரியான சூல்நிலைமைகளில் எழுதப்படுகிறது என்பதே? எதற்கு? மொழி என்ன வேலையை செய்கிறது, அழகியல் எங்கெல்லாம் உட்கார்ந்துள்ளதோ அங்கெல்லாம் பிளவும் ஆனவமும் மேட்டிமையும் இருக்கதான் செய்யும் அழகு அபத்தமானது அதிகார நார்கக்காளியை தலையில் சுமந்து திரிவதுதான், நடை, பாவனை, காது, தொண்டை என மின்னிக்கொண்டுதான் இருக்கும் , இது அபத்தம் இதை உடைத்து எறிந்தது புதுக்கவிதைகள் தாம் ரிய