பல வருடம் பொதிந்திருந்து பவளமாகும் மணியே _வெறும் பத்து மாதம் பொதிந்திருந்து உன்னை வென்று விட்டாள் சிறுவானி நீர் போல _உன் சிரிப்பிங்கே இனிக்குதடி கண்பார்வை படும் போதெல்லாம் எனை அங்கே மறப்பேனடி எத்தனை முறை ஒத்திகை பார்த்தும் உன்னை நேரில் காணும் போது திக்குவாய் தொற்றுகிறதே உடல் விட்டு உயிர்போகும் நிலம் விட்டு எதுவும் போகும் என் நினைவுவிட்டு போகாதவள் நீ பேசும் போதெல்லாம் கார்மேகம் சூழ்கிறது விழியுருட்டி நீ பார்த்தால் மின்னலொன்று முளைக்குது குலுங்கி நீ சிரித்தால் என் நெஞ்சம் ஒரு அடி துள்ளுகிறதே பூ விதழ் மேனியிலே படுத்துறங்க கட்டழகு தோணியிலே கைவைக்க ஆசைதான். கோபம்வேண்டாம் உடலுறவுடன் அன்பை ஊட்டுவதுதானடி காதல் எனக்கு தெரிந்ததெல்லாம் ...நீ.......... நீ.. எனை விட்டு போகாதே என் உள்ளம் தாங்காதே எனை நீங்கி சென்றாலோ என் உயிர் வாழாதே ..