Skip to main content

பகவத்கீதை சனாதனம்....?


பகவத்கீதை

சனாதன நூலான பகவத்கீதையைத் தவிர எந்த ஒரு மதமும் தங்களது மத நூலை இவர்கள்தான் வாசிக்கனும் இவர்கள் வாசிக்கக் கூடாது எனக் கூறியதில்லை. 

கீதா-தத்வவிவேசனி (கீதாபிரஸ்-கோரக்பூர்)உள்ள விளக்க உரை;

பகவான் கீதையின் உபதேசத்தை நிறைவு செய்து,இனி அந்த உபதேசத்தைக் கற்பித்து,கற்பது முதலியவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டு,முதலில் தகுதியற்றவர்களின் இலக்கணங்களைக் கூறி,அவர்களுக்கு கீதோபதேசம் செய்யக் கூடாது என்கிறார்-

इदं नातपस्काय नाभक्ताय कदाचन । 
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७॥

இதம் தே நாதபஸ்காய நாப க்தாய கதா சந I
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோகப் யஸூயதி II 67

உனக்குக் கூறப்பட்ட இந்த ரஸஸ்யமான கீதோபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. பக்தியில்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ அவனுக்கு ஒருபொழுதும் சொல்லக்கூடாது.

-கீதா தத்வவிவேசனீ,அத்18.67-கீதா பிரஸ்

இதை யாருக்கு போதிக்கலாம்? அவருக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மாளிப்பதற்காக,நான்கு வகையான மாசு உள்ளவர்களுக்கு உபதேசம் செய்யக்கூடாது என்று பகவான் தடை விதிக்கிறார். முதலாவதாக, தவம் செய்யாதவனுக்கு கீதோபதோம் செய்யக்கூடாது என்கிறார்.

"இந்த சீதாசாஸ்த்ரம் மிகவும் மறைத்துப் போற்றப்பட வேண்டிய நூல் நீ என்னிடம்
மிகவும் அன்புள்ள பக்தனாகவும் தெய்வீக ஸம்பத் நிறைந்தவனாகவும் இருப்பதால் 
உபதேசம் பெறத்தக்கவன் என்றும் உன் மேன்மையைக் கருதியும்,உனக்கு உபதேசம்
செய்தேன். எவனொருவன் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்ற தவம்
செய்யாதவனோ உலகியல் போகங்களில் உள்ள பற்றினால் உலகியல் சிற்றின்ப வேட்கைக்கு
ஆட்பட்டு ஸ்வதர்மத்தைக் கைவிட்டுப் பாவ கர்மங்களில் ஈடுபடுகிறானோ, அத்தகையவனுக்கு என்னுடைய குணங்கள் பிரபாவங்கள்,தத்வங்கள் நிறைந்த இந்த சாஸ்த்ரத்தைச் சொல்லக் கூடாது. ஏனெனில் அவன் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உபதேசத்திற்கும், எனக்கும் மரியாதை இராது" என்கிறார் பகவான்.

கேள்வி: 'பக்தியில்லாதவனுக்கும் ஒருபொழுதும் இதை உபதேசம் செய்யக் கூடாது என்று கூறுவதன் கருத்து என்ன?

பதில் : இப்படிச் சொல்வதன் மூலம், பக்தி இல்லாத மனிதனுக்கு மேலே சொன்ன உபதேசத்தைச் சொல்வதைத் தடுக்கிறார். பரமாத்மாவான என்னிடம் எவனுக்கு நம்பிக்கையும், ப்ரேமையும், மதிப்பும் இல்லையோ, எவன் தன்னையே பெரியவனாக நினைத்துக் கொண்ட நாஸ்திகனோ, அத்தகையவனுக்கும் மிகவும் மறைத்துப் போற்றப்பட வேண்டிய இந்த கீதாசாஸ்த்ரத்தைச் சொல்லக் கூடாது. அவன் இதைக் கேட்டு விட்டு, இதன் கருத்துக்கள் புரியாத காரணத்தால் மனதில் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்கிறார்.

கேள்வி: 'அஸுஸ்ருஷவே' என்றால் என்ன பொருள்? 'அவனுக்கும் சொல்லக்கூடாது' என்று கூறுவதன் கருத்து என்ன?

பதில்: எவனுக்கு இந்த கீதா சாஸ்த்ரத்தைக் கேட்டறிந்து கொள்ள விருப்பமில்லையோ, அவனை 'அஸுஸ்ரூஷவே' என்ற சொல் குறிக்கிறது. அவனுக்கு உபதேசம் செய்வதைத் தடுக்கிறார். ஒருவன் ஸ்வதர்மத்தை நன்கு கடைப்பிடித்து வரலாம் அவனுக்கு கீதாசாஸ்த்ரத்தைக் கேட்டறிவதில் ச்ரத்தையும், ப்ரேமையும் இல்லாததால், கேட்க விருப்பமில்லாவிடில் மறைத்துப் போற்றப்பட வேண்டிய கீதையை அவனுக்கும் உபதேசம் செய்யக் கூடாது.அவனுக்கு இதைக் கேட்டுச் சலிப்பு ஏற்படலாம். அதனால் ஏற்றுக் கொள்ள முடியாது.ஆகவே என் உபதேசத்திலும் என்னிடத்திலும் அலக்ஷயம் ஏற்பட்டுவிடும் என்கிறார்.

கேள்வி: 'என்னிடம் குறை காண்பவனுக்கு ஒருபோதும் இதைச் சொல்லவே கூடாது என்று கூறுவதன் கருத்து என்ன?

பதில்: "உலகை உய்விப்பதற்காக ஸகுண ஸ்வரூபமாக வெளிப்பட்டுள்ள பரமாத்மாவான என்னிடம், யார் குறை காண்கிறார்களோ, என்னுடைய குணங்களைக் குற்றமாகக் கருதி என்னை நிந்திக்கிறார்களோ அத்தகையவருக்கு எந்த நிலையிலும் இந்த கீதையை உபதேசிக்கக் கூடாது. என்னுடைய குணங்களிலும், ப்ரபாவங்களிலும் ஆளுமையிலும் அவர்களுக்கு ஏற்படும் பொறாமையின் காரணமாக இவ்வுபதேசத்தைக் கேட்டு முன்னிலும் அதிகமாக என்னை அவமதித்துப் பாவத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்" என்று எச்சரிக்கிறார்.

கேள்வி: இந்த நான்கு குற்றங்களும் சேர்ந்தாற்போல் இருப்பவர்களுக்குத்தாள் இதைச் சொல்லக் கூடாதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று குற்றமிருந்தாலும்கூடச் சொல்லக் கூடாதா?

பதில்: இந்த நான்கு குறைகளில் ஒன்றுகூட இல்லாதவர்தாம் இந்த உபதேசம் பெற முற்றிலும் தகுதி பெற்றவர் ஆவர். இவரைத் தவிர ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் சற்றுக் குறை இருந்தாலும், மற்ற மூன்று குறைகள் இல்லாவிட்டால் அவருக்கும் இதைக் கேட்கத் தகுதியுண்டு. ஸ்வதர்மம் என்ற தவம் செய்யாவிட்டாலும், பகவானிடம் பூரணபத்தி இல்லாவிட்டாலும், கீதையைக் கேட்க வேண்டும் என்று விருப்பம் இருந்துவிட்டால் அவர்
ஓரளவு தகுதி பெற்றவர்தான். ஆனால் பகவானிடமே குற்றம், குறை காண்பவனுக்கும் அவரை இகழ்பவனுக்கும் கீதையைக் கேட்கச் சற்றும் தகுதி கிடையாது. அவனுக்கு ஒருபோதும் சொல்லக்கூடாது.

This secret gospel of the Gītā should never be imparted to a man who lacks penance, nor to him who is wanting in devotion, nor even to him who lends not a willing ear; and in no case to him who finds fault with Me.(ch 18:67)

In no case should this teaching be repeated to a man who cavils at the Lord,- who has assumed a form with attributes for redeeming the world,-who paints His virtues as a vice and vilifies Him. For, being jealous of the Lord's virtues, glory and divinity, he would treat the Lord with even greater contempt and thereby aggravate his sin.

He who is free from all the four disqualifications mentioned in this verse is unquestionably fully qualified to receive this gospel. Next to him, he who lacks penance in the form of devotion to his duty, but is free from the other three disqualifications is also eligible for it. And he too who is neither given to austerity nor fully devoted to the Lord, but who is willing to hear the Gītā, is qualified to a certain extent. He, however, who looks on the Lord with a carping or vilifies Him is absolutely unqualified.

மேலுள்ளவை அனைத்தும் கீதா-தத்வவிவேசனி - கீதா பிரஸ் (உரையாசிரியர்: ஜயதயால் கோயந்தகா)ல் பகவத் கீதை அத்.18.67 ஸ்லோகத்திற்கான விளக்க உரை.
இதே ஸ்லோகத்திற்கு கீதாவ்யாக்யானம்(உரையாசிரியர்:S.கிருஷ்ணசாமி அய்யங்கார்)நூலில் உள்ள விளக்க உரையினைக் கீழே தருகிறேன்,

“இங்கு நான் உரைத்த இந்த சாஸ்த்ரமாகிற ரஹஸ்யார்த்தத்தை, இல்லாத் தவத்தாற்கும் - தவம் செய்யாதவனுக்கும், என்னிடையில் - என் விஷயத்தில், மெய்ப்பொருளாம் பத்தியிலா வீணற்கும் பக்தியில்லாத உண்மையான பக்தியில்லாத அஸத்துக்கும், சொப்படவே 
இச்சையுடன் கேளாற்கும் நிறைந்த விருப்பத்துடன் கேளாதவனுக்கும் என்னைப் பொறாதாற்கும் என்னைத் துவேஷிப்பவனுக்கும், ஆங்கு அச்சமுற இவ்வுலகில் பயம் விளையும்படியாக,நீ உரையேல்-நீ உபதேசித்து விடாதே.”

இதே ஸ்லோகத்திற்கு ஶ்ரீமத் பகவத்கீதை-சுதேசமித்திரன் பதிப்பு(உரையாசிரியர்: ஶ்ரீமான் ஸி.ஆர்.ஶ்ரீநிவாஸ அய்யங்கார்) கூறும் விளக்க உரை:

“அர்ஜுனா! உன் க்ஷேமத்திற்காக நான் உபதேசித்த இந்த ப்ரஹ்ம வித்யையை, தபஸ் செய்து மனோ வாக் காயங்களை அடக்கா தவனுக்கு உபதேசிக்காதே. அப்படித் தவம் செய்த வனானாலும் என்னிடத்திலும் ஆசார்யனிடத்திலும் பக்தியில்லாதவனுக்கு ஒருக்காலும் உபதேசிக்காதே. பக்தனும் தபஸ் வியுமானாலும், இதைச் சிரத்தையுடன் கேட்க விரும்பாதவனுக்கு உபதேசிக்காதே. மேற்சொன்ன குணங்களிருந்தா லும், என்னைக் கேவலம் மனிதனாய் எண்ணி, இந்த சாஸ்திரத்தில் ஆத்ம ஸ்தோத்ரம் செய்து கொள்ளுகிறேனென்ற தோஷத்தை என் என்னிடத்தில் வைத்து, என் ஈசுவரத்தன்மையை அறியாமல், என்னைப்போன்ற மனிதன் சொன்னதை நான் கொண்டாட வேண்டியதில்லை யென்று என்னிடத்தில் அஸூயை செய்கிறவனுக்கு எக்காலத்திலும் உபதேசிக்காதே.”

பகவத் கீதை அத்.18.67 உள்ள கருத்தே, 
அத்.15.20 உள்ள ஸ்லோகத்திலும் வெளிப்படுகிறது, 

பகவத்கீதையானது பரம ரகசியமான நூல் என்றும் அதைக் கேட்கும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும் என ஶ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கூறுகிறார். 

इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च मयानघ । भारत ॥ २० ॥

இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமித முக்தம் மயாநக I
ஏதத் புத்த்வா புத்தி மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்ச பாரத || 20

“பாவமற்றவனே! அர்ஜுனா! இவ்வாறு மிகவும் ரஹஸ்யமாக மறைத்துப் போற்றத்தக்க இந்த சாஸ்திரம் என்னால் கூறப்பட்டது. இதைத் த த்வரீதியாக அறிந்து கொண்ட மனிதன் ஞானியாகவும் செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும் ஆகிறான்.”
-கீதா தத்வவிவேசனீ,அத்15.20 -கீதா பிரஸ்

கேள்வி:இந்த உபதேசம் உத்தமமான ரஹஸ்யம் இது என்னால் உனக்குச் சொல்லப்பட்டது' என்று கூறுவதன் கருத்து என்ன?

பதில்: இந்த அத்யாயத்தில் ஸகுண பரமாத்மாவின் குணங்கள்,பிரபாவங்கள்,தத்வம் ரஹஸ்யம் இவை முக்யமாகக் கூறப்பட்டன. ஆகவே மிகவும் ரஹஸ்யமாகப் போற்றத்தக்கது. 'நான் யாரிடமும் இவ்விதம் என் குணம், ப்ரபாவம், தத்வம், ஐசுவர்யம் (ஈசுவரத்தன்மை) இவற்றை வெளிப்படுத்துவதில்லை. ஆகவே, நீயும் தகுதியில்லாத யாரிடமும் இந்த ரஹஸ்யத்தைச் சொல்லக் கூடாது. ஸர்வ வல்லமை படைத்த அனைத்தும் அறிந்த பரமேசுவரன் ஆகிய என்னால் கூறப்பட்டது இது எல்லா வேதங்களின், சாஸ்த்ரங்களின் 'பரம ஸாரமான விஷயம்' என்பது இங்கே குறிப்பு.

இதே நூலின் ஆங்கிலப் பதிப்பில் உள்ள உரை;

“By speaking of this teaching as ‘Guhyatamam' the Lord seeks to convey that the virtues, glory, truth and mystery of God with attributes form the principal theme of this chapter; hence it should be kept most secret. The Lord does not reveal before all and sundry His virtues, glory, truth and divinity as He has done in this chapter; therefore, He expects that Arjuna too should not communicate this secret to an undeserving person.”
-Srimadbhagavad Gita Tattvavivecani,Ch.15.20-Gita Press,2017 edition

அத்15:20 ஸ்லோகத்திற்கு கீதாவ்யாக்யானம்(உரையாசிரியர்:S.கிருஷ்ணசாமி அய்யங்கார் ) கூறும் விளக்கம்;

“இந்த சாஸ்த்ரம் மேலும் எத்தகையது? எனில்:(குஹ்யதமம்)அநதிகாரிகளிடமிருந்து மறைக்கத்தக்க எல்லா ரஹஸ்யங்களைக் காட்டிலும் பரம் ரஹஸ்யமானது. (மயா உக்தம்) சொல்லவேண்டிய எல்லா உண்மைகளையும் அறிந் தவனாய், நீ தகுந்த அதிகாரி என்பதை அறிந்தவனாய், உனது நண்பனான என்னாலே சொல்லப்பட்டது. (இதி உக்தம்) வேறெவராலும் இதற்கு இவ்வர்த்தாம் உன் தகுதி கருதி இப்போது சொல்லப்பட்டது என்று கருத்து.”

“பாபமற்ற அர்ஜுனா! பரம ரஹஸ்யமான இந்த மோக்ஷ சாஸ்திரத்தை இவ்விதமாய் உனக்குச் சொன்னேன். இதை அறிந்தவன் புத்திமானாவான்.”
-ஶ்ரீமத் பகவத்கீதை-அத்.15.20,சுதேசமித்திரன் வெளியீடு

“பகவத்கீதை நூலை ஒடுக்கப்பட்டவர்களுக்கு அளிப்பவர்கள் பைத்தியக்காரர்கள்”
இதை நான் கூறியதாக தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். இதைக் கூறியவர் ஶ்ரீ ராமாந்ந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யதீர்த்த ஸ்வாமிகளால் துரியாசிரமம் பெற்று ஶ்ரீ ஞானானந்த பாரதீ என்று பட்டம் வாங்கியவர்.முன்னாள் சென்னை மாகாண வர்ணாசிரம மகாநாட்டு கமிட்டி தலைவர்.இவர் பகவத் கீதையை சண்டாளர் பஞ்சமர் குழந்தைகள் வாசித்தல் கூடாது என்கிறார். இதை இன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கென தனி தர்மம் ஏதும் சனாதன நூல்களில் ஏதுமில்லை. சூத்திரர் மற்றும் பெண்கள் நலன் சார்ந்த ஒரு சனாதன நூலும் இல்லை.ஆனால் சனாதனத்தைப் பின்பற்றுகிறவர்களில் பெரும்பாண்மையான ஒடுக்கப்பட்ட மக்களும் உண்டு.இது அறியாமையின் அதி உச்சம்! 

ஸ்ரீ ராமாநந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகள்-தர்ம விமர்சனம் நூலில் குறிப்பிட்டுள்ளதைத் தருகிறேன்,

"பகவத்கீதையை வாசிப்பதில் தனக்கு சுகமேற்படுவதாகத் தெரிந்தால், அப்படியே சண்டாளா பஞ்சம-ஜாதிக் குழந்தைகளுக்கும் சுகமேற்படுமென எண்ணி கீதா புஸ்தகங்களை வாங்கி அக்குழந்தைகளிடம் கொடுப்பவரை பிராந்தியுள்ளவரென்றே(பைத்தியம் பிடித்தவரென்றே) நினைக்கவேண்டும்"

பகவத் கீதையில் உள்ளதைத்தான் ‘தர்ம விமர்சனம் நூலில்’ ஶ்ரீ ராமாநந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகள் எழுதியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

உன்னை போல் பிறரையும் நேசி

புளிப்பின் சுவை தெரியாமலே , மாங்காய் புளிக்கும் என்பது எவ்வளவு முட்டாள் தனமோ ! அதுபோலவே நம் வாழ்வின் பொருள் தெரியாமலே வாழ்வதும் பிதற்றுவதுவும் , வாழ்வில் முழுமைபெறாததும்! அப்படியானால் நாம் வாழ்வது கற்பனை,கனவில்தான். [உண்மை ,நினைவு ,சுயம் ,நிஜம் ] என்பது தெரிந்து செய்வதுதானே இந்த பொய்யான வாழ்வுக்கே எத்தனை முகங்களை ஒரு மனிதன் வெளிப்படுத்துகிறான். நடிப்பதை நிறுத்துவோம் . உன்னை போல் பிறரையும் நேசி {[இந்த சின்ன வார்த்தைக்குள் அத்தனையும் முடிந்து விடுகிறது ]} அப்படியானால் உன்னை நேசிக்கிறாய். இல்லையேல் உன்னையே நீ உணரவில்லை.

sanathanam

பிராம்மணீயம்“வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”“ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்

நான் கடவுளானால்

நான் கடவுளானால் என்னை வணங்கு பவர்களை கொன்றுவிடுவேன் வரம் கேட்கும் மடையனை தீயிலிடுவேன்_மற்றவனை குறை சொல்லும் சனியனை ஊமை யாக்குவேன் _தேவை இல்லாத கட்டுபாடுகளை ,கோட்பாடுகளை அவிழ்த்தெரிவேன் ஆடை கண்டுபிடித்தவனை முதலில் அறுத்தெறிவேன் தன்னை மட்டும் நேசிக்கும் தன்னலமில்லாத வனை நான் வணங்குவேன் ஏனென்றால் நானே சுயநலவாதி