Skip to main content

Posts

Showing posts from January 23, 2011

வயதுக்கு வந்ததால்!

கோன்ஐசும் கோலி குண்டும் நிறையவே கிடைக்கும் , மிதிவண்டியின் பின்னால் அமரவே அதிக வாய்ப்பு கிடைத்தது எனக்கோ சிறு ஏக்கம் உண்டு வயது மூத்தவர் களை எல்லாம் பார்க்கும் போது பெரிய ஏக்கம் உண்டு எங்கள் ஊரின் வழியாய் செல்லும் ரெயிலும் ,பேருந்தும் எனை அதிகம் சுமந்ததுண்டு பனை ஏறு பாவனையும் ,தெருவிளக்கு கம்பத்தில் ஏறு பாவனையும் அதிகம் கண்டதுண்டு நிலவை உரசும் விமானம் அடிக்கடி பார்ப்பதுண்டு அப்பாவை பார்க்கும் போதெல்லாம் சிறு ஏக்கம் உண்டு ! சரி தவறு தெரியாததால் போலிஸ் ,திருடன் இருவரில் செயிப்பவரையே அதிகம் பிடிக்கும் அதிலும் சிறு ஏக்கம் உண்டு அத்தனை ஏக்கமும் நிறைவேறி வெறுத்து துக்கப்படுகிறேன் எதுக்குதான் பெரியவனா வளந்தேனோ சின்ன பையனாவே இருந்திருக்கலாம் என . மற்றுமொரு ஏக்கம்! உலகம் எனை ஏமாற்றுகிறதா தெரிய வில்லை ! கருவறையில் துடித்தேன் உதைத்தேன் உலகைகான ஏக்கப் பட்டேன். சில பொருளுக்காய் உணர்வுகளுக்காய் ஏக்கப் பட்டேன் முடித்து விட்டு மீண்டும் கருவறைக்கே ஏக்கப் படுகிறேன் உலகம் எனை ஏமாற்றுகிறதா தெரிய வில்லை !

மது என் காதலி

சனமெல்லாம் எழும்முன்  அவளைக்கான ஆசைப்படுகிறேன் தெருவிளக்கு அணையும்முன் அவளை ஒருமுறை இறுக்கி அணைக்கிறேன் சூரியன் பார்க்கும் முன் கண்னோளியால் தடவிவிடுவேன் துங்கும் முன் ஒருமுறை குடித்திடுவேன் இடையில் விழித்தெழுந்தால் மறுபடியும் மூச்சுத்திணற குடித்திடுவேன் அவளுடன் உறவு கொள்ளும் போ தெல்லாம் எனை மறந்து விடுகிறேன் உச்சத்தின் போது எனையிழந்து செயலிழந்து மயங்கி விடுகிறேன் எத்தனை நோய்க்கு அடிப்படை எனினும் முத்தமிட்டு விழுங்குவேன் கசப்பாய் இருந்தும் உன்னை நேசிப்பதால் பத்து கட்டளைகளில் ஒன்றை கடைபிடிக்கிறேன் உன்னை தினமும் நினைப்பதே நோயாகிப் போனதெனக்கு என் உயிரை வாங்கும் சரக்கு (ஆல்கஹால்). உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் பெண் நீதான் எத்தனை புருஷன்மார்கள் உனக்கு கணக்கில்லை அதற்க்கு உண்மையை காக்கவைக்கும் அரும் மருந்து நீதான் சுகத்தினூடே மரணத்தைக் கொடுக்கும் கடவுளும் நீதான் பெருத்த சோகத்தில் ஆறுதல் நீ மட்டும் தான் உயிருள்ள நாளளவும் உன்னுடன் படுத்திட நினைத்தேனே வாதம் கொடுத்து வணக்கமிட்டு சென்றுவிட்டாயே ! அதிகம் உனை நேசித்ததாலா இந்ததண்டனை இனியவளே உ
ஏன் ஒருத்தியை மட்டும் காதலிக்கிறேன் அவள் என் அருகில் இருந்திருந்தால் முத்தமிட்டு இருப்பேன் தனியறையில் அமர்ந்திருந்தால் உடலுறவு வைத்திருப்பேன் காதலிக்கும் போது காமம் முளைவிடாமலில்லை வானம் காதலென்றால் காமம் நிலவைப் போல் இருந்தது அது சூரியனாய் மாற இடம் தறவில்லை ஆனால் பார்வையில் நாங்கள் நிர்வாணமானோம் ! பனித்துளிப் போல சுருங்கி சிலநேரம் பிரபஞ்சமாய் வெடித்து சிதறினோம் ஒவ்வொரு பெண்ணும் காமத்தை விதைகிறாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நான் காமத்தை விதைக்கிறேன் ஆனால் அவளிடமிருந்து மட்டும் சமிஞைகள் வருகிறது அவளை காதலிக்கும் முன் அவளும் எனக்கொரு உபப்பொருள் தான் . அவளை தேடுகிறேன் என் தனிமையை களவாடிக் கொள்கிறாள் ! எல்லா பெண்ணின் அழகையும் ரசித்தாலும் அத்தனை ஆசைகளையும் அவளுடன் நடத்த திட்டமிட்டதால் ! அவளை தேடுகிறேன்

ஏன் ஒருத்தியை மட்டும் காதலிக்கிறேன்

அவள் என் அருகில் இருந்திருந்தால்  முத்தமிட்டு இருப்பேன் தனியறையில் அமர்ந்திருந்தால் உடலுறவு வைத்திருப்பேன் காதலிக்கும் போது காமம் முளைவிடாமலில்லை வானம் காதலென்றால் காமம் நிலவைப் போல் இருந்தது அது சூரியனாய் மாற இடம் தறவில்லை ஆனால் பார்வையில் நாங்கள் நிர்வாணமானோம் ! பனித்துளிப் போல சுருங்கி சிலநேரம் பிரபஞ்சமாய் வெடித்து சிதறினோம் ஒவ்வொரு பெண்ணும் காமத்தை விதைகிறாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நான் காமத்தை விதைக்கிறேன் ஆனால் அவளிடமிருந்து மட்டும் சமிஞைகள் வருகிறது அவளை காதலிக்கும் முன் அவளும் எனக்கொரு உபப்பொருள் தான் . அவளை தேடுகிறேன் என் தனிமையை களவாடிக் கொள்கிறாள் ! எல்லா பெண்ணின் அழகையும் ரசித்தாலும் அத்தனை ஆசைகளையும் அவளுடன் நடத்த திட்டமிட்டதால் ! அவளை தேடுகிறேன்

நிர்வாணம்

காமம் நிர்வாணத்தை மறந்து விடுகிறது பெண்ணின் முன்னாள் தனிமையில் நிர்வாணம் அழகாகிறது வெட்கம் பறந்து விடுகிறது மானம் எங்கோ தெரியவில்லை அத்தனையும் முடித்து விட்டு முகப்பூச்சுடன் வெளியேறும் போது எங்கிருந்து தான் வருமோ நல்லவன் என்ற முகத்திரை இதில் அடுத்தவனை வேறு குறை சொல்லுவது!

நான் கடவுளானால்

நான் கடவுளானால் என்னை வணங்கு பவர்களை கொன்றுவிடுவேன் வரம் கேட்கும் மடையனை தீயிலிடுவேன்_மற்றவனை குறை சொல்லும் சனியனை ஊமை யாக்குவேன் _தேவை இல்லாத கட்டுபாடுகளை ,கோட்பாடுகளை அவிழ்த்தெரிவேன் ஆடை கண்டுபிடித்தவனை முதலில் அறுத்தெறிவேன் தன்னை மட்டும் நேசிக்கும் தன்னலமில்லாத வனை நான் வணங்குவேன் ஏனென்றால் நானே சுயநலவாதி

வார்த்தை

சொல்வதென்னவோ சின்ன வார்த்தை தான் செய்வ தென்னவோ பலமான விளைவு உடைந்துவிடுகிறது , சில மாதங்களில் இலையில் படிந்த பழைய படிமங்களை எடுத்து வரும் மழைத்துளி போல சில சமயம் உன் சமுதாய சீழ்படிந்த சாயங்கள் உடைத்து விடுகிறது வாழ்வை