Skip to main content

Posts

Showing posts from 2023

பகவத்கீதை சனாதனம்....?

பகவத்கீதை சனாதன நூலான பகவத்கீதையைத் தவிர எந்த ஒரு மதமும் தங்களது மத நூலை இவர்கள்தான் வாசிக்கனும் இவர்கள் வாசிக்கக் கூடாது எனக் கூறியதில்லை.  கீதா-தத்வவிவேசனி (கீதாபிரஸ்-கோரக்பூர்)உள்ள விளக்க உரை; பகவான் கீதையின் உபதேசத்தை நிறைவு செய்து,இனி அந்த உபதேசத்தைக் கற்பித்து,கற்பது முதலியவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டு,முதலில் தகுதியற்றவர்களின் இலக்கணங்களைக் கூறி,அவர்களுக்கு கீதோபதேசம் செய்யக் கூடாது என்கிறார்- इदं नातपस्काय नाभक्ताय कदाचन ।  न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७॥ இதம் தே நாதபஸ்காய நாப க்தாய கதா சந I ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோகப் யஸூயதி II 67 உனக்குக் கூறப்பட்ட இந்த ரஸஸ்யமான கீதோபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. பக்தியில்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ அவனுக்கு ஒருபொழுதும் சொல்லக்கூடாது. -கீதா தத்வவிவேசனீ,அத்18.67-கீதா பிரஸ் இதை யாருக்கு போதிக்கலாம்? அவருக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மாளிப்பதற்காக,நான்கு வகையான மாசு உள்ளவர்களுக்கு உபதேசம்

திபெத்திய பீடபூமி (TIBETAN PLATEAU)

திபெத்திய பீடபூமி (TIBETAN PLATEAU) மேலே எதனால் விமானங்கள் பறப்பதை தவிர்க்கிறார்கள்? திபெத்தின் மலைப் பகுதி கொந்தளிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது, இது பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் ஆபத்தானது. இப்பகுதியில் குறைந்த வெப்பநிலை ஜெட் எரிபொருள் உறைபனியின் அபாயத்தை ஏற்படுத்துகிறது, இது கடுமையான விபத்துக்களுக்கு வழிவகுக்கும், இது ஜெட் எரிபொருள் ஓட்டத்திற்கான வெப்பநிலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. The mountainous region of Tibet increases the risk of turbulence, making it disruptive for passengers and potentially dangerous. Low temperatures in the region pose a risk of jet fuel freezing, which can lead to severe crashes, highlighting the importance of temperature for jet fuel flow.

1940

யூதர்களே 1940 களில் உங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறையை எதிர்த்து பாஸிஸ்ட்டுகள், நாஜிக்கள், போர் வெறியர்கள் தவிர்த்து ஜனநாயகத்தை, சமாதானத்தை விரும்பிய வர்களின் உலகமே உங்கள் பக்கம் நின்றது.  நீங்கள் 60 லட்சம் பேர் பாசிச ஆரிய இன வெறியால் மிகக்கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டீர்கள்.. அந்த துயரை உங்களோடு சேர்ந்து உலகமே அனுபவித்தது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கணக்கான திரைபடங்கள் லட்சோப லட்ச கண்டனங்கள். உங்களை இன்னலிலிருந்து மீட்க எத்தனை ஆயிரம் நேசப்படைகள் தங்கள் இன்னுயிரை தந்து உங்களில் எஞ்சியவர்களை மீட்டனர் என்பதை மறந்த சமூகமாக மாறிவிட்டீர்களே இது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம்,  பல ஆயிரம் ஆண்டுகளாக நாடற்று பல நாடுகளில் உங்களை தக்க வைத்துகொண்ட வரலாறுகளை மறந்துவிட்டீர்களா? இரண்டாம் உலகப் போரின் முடிவு நேசப்படைகளுக்கு சாதகமாக அமையாமல் போயிருந்தால் யூதர்களின் இருப்பு இந்த பூமியில் என்னவாக இருந்திருக்கும்? இந்த வரலாற்றுக் கேள்வி எவ்வளவு பயங்கரமானது (உங்களுக்கு விடுதலை தர வந்த யூதர்களின் அரசன் என்று தன்னை சொல்லிக்கொண்ட இயேசுவால் முடியாததை) 1947ல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வே

மருத்துவர் தாமஸ் சி. ஜெர்டன் என்கிற தாமஸ் கேவரிஹில்

அக்டோபர் – 12 – 1811 - இந்தியப் பறவையியல் பிதாமகன், விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் தாமஸ் சி. ஜெர்டன் என்கிற தாமஸ் கேவரிஹில் ஜெர்டான் பிறந்ததினம்.* இந்தியப் பறவையியலின் முன்னோடிகளில் ஒருவரும் டி.சி. ஜெர்டான் என்று அழைக்கப்படுபவருமான தாமஸ் கேவர்ஹில் ஜெர்டான் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் 1811-ல் அக்டோபர் 12 அன்று பிறந்தார். மருத்துவம் பயின்ற அவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அறுவைசிகிச்சை மருத்துவராக (துணை சர்ஜன்) இந்தியாவுக்கு 1836-ல் வந்தார். சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதும் தாவரங்கள் மீதும் ஆர்வம் மிகுந்தவர் ஜெர்டான். இந்தியாவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை (specimen) சேகரிக்க ஆரம்பித்தார். தக்காணப் பீடபூமி பகுதியிலும் கிழக்கு மலைத் தொடரிலும் அவர் பணிபுரிந்தார். ஃபுளோரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு நெல்லூர் பகுதியிலும் பின்னர் தலைச்சேரியிலும் பணியாற்றினார். இவை இரண்டுமே அன்றைய மதராஸ் மாகாணத்தின் பகுதிகளாக இருந்தவை. *ஏன் இந்த மாற்றம்?* பறவைகள், தாவரங்கள் மட்டுமன்றிப் பூச்சிகள், ஊர்வன, நீர்நில வாழ்விகள், பாலூட்டிகள் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு

இன்றைய இஸ்ரேல் உருவானது எப்படி?

தோழர் ஆனந்தன் Anandan Ganesan பதிவு இன்றைய இஸ்ரேல் உருவானதில் மிக முக்கி யப் பங்கு வகிப்பது, ‘பெல்பேர் பிரகடனம்’. பிரிட்டன் அரசு எவ்வாறு பாலஸ்தீன அரேபியர் களுக்கு துரோகம் இழைத்தது என்பதை அறிந்து கொள்ள பெல்பேர் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். 2017ல் அந்த பிரகடனத்தின் நூற்றாண்டு விழாவை பிரிட்டன் அரசு லண்டனில் கொண்டாடியது. உலகம் முழுவதுமுள்ள அரேபியர்கள் அந்த நாளை தங்களின் உரிமையை, அடிப்படை வாழும் உரிமையையே பறித்த நாளாய்ப் பார்க்கிறார்கள்.  முதல் உலகப் போர்(1914-18) முதல் உலக யுத்தத்தில் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும், துருக்கியின் ஆட்டோமான் காலிஃபட், ஜெர்மனி ஆகிய அச்சு மைய அதிகார நாடுகள் எதிர் அணியிலுமிருந்து சண்டையிட்டன. 4 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தத்தில் 85 லட்சம் வீரர்கள் இரண்டு பக்கமும் மடிந்தனர். 70 லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சண்டை ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் நடைபெற்றது. யூதர்களைக் கவர... 1914ல் யுத்தம் தொடங்கப்பட்ட போது, தங்களுக்கு வலு சேர்க்க, யூதர்களின் ஆதரவு தேவை என பிரிட்ட னின் ‘யுத்த அமைச்சரவை’(வார் கேபினட்) முடிவு செய்தது. காரணம் அவர்களிடமிருந்த செல்

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

fight

கன்னியாகுமரியில் ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே மோதல்.  4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி! கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

சனாதனம்

#Dhinakaran_Chelliah  #சனாதனலீக்ஸ் #பிராம்மணீயம் “வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி. பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.” “ரொம்பவும் பகுத்

துன்பங்களுக்கெல்லாம் பிறப்பிடமான பெண்ணிடம் ஒரு சுகமும் இல்லை__ சிவபுராணம்😃

துன்பங்களுக்கெல்லாம் பிறப்பிடமான பெண்ணிடம் ஒரு சுகமும் இல்லை__ சிவபுராணம்😃

திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம்  1. தடாதகைப்‌ பிராட்டியார்‌ திருவவதாரப்‌ படலம்‌  மலயயைத்துவச பாண்டியன்‌ பண்பு ; மலயத்துவச பாண்டியன்‌ மனுநூலில்‌ கூறிய ௮றநெறி தவறாது செங்கோல்‌ செலுத்துபவன்‌ ; ஒழுக்கம்‌ நிறைந்தவன்‌ ;  வெற்றியை ௮ணிகலமாகக்‌ கொண்டவன்‌… ********** 2. வங்கியசேகர பாண்டியனின்‌ ஆட்சிமுறை; பின்னர்‌ சந்திரன்‌ மரபாகிய பாற்கடலுள்‌ அறுபத்து  நான்கு கலைகளோடும்‌ விளங்‌கித்‌ தோன்றும்‌ முழுமதிபோல வங்கிய சேகர பாண்டியன்‌ என்னும்‌ அரசன்‌ தோன்றினான்‌.  ௮வன்‌ சோமசுந்தரக்‌ கடவுளின்‌ திருக்கோயிலைச்‌ சூழ ௮ழகிய சிறு நகரம்‌ ஓன்றை அமைத்து, அதில்‌ இருந்துகொண்டு  ௮ரசு நடாத்தி வந்தான்‌. ௮வன்‌ மனு வழியே செங்கோல்‌  செலுத்தினமையால்‌ கலி என்னும்‌ பகைவன்‌ புறங்காட்டி  ஓடத்‌ தன்னாடு எங்கும்‌ பல வளங்களைச்‌ சுரக்க, மக்கள்‌ நாடோறும்‌ பெருகினார்கள்‌. 3. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்; ௮வர்‌ வேத முறைப்படி  கர்ணவேதன முதலிய மற்றைச்‌ சடங்குகளெல்லாம்‌ நிறையப்‌ பெற்று இளம்பிறை வளர்வதுபோல வளர்ச்சியடைந்தார்‌.  வேத முதலான அறுபத்து நான்கு கலைகளையும்‌ பதினாறு வயதளவில்‌ கற்றுணர்ந்தார்‌. இத்‌ திருவாதவூரருடைய கல்வித்‌ திறமை முதலியவற்ற

sanathanam

பிராம்மணீயம்“வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”“ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: திமுக அளித்த வாக்குறுதி என்ன?

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: திமுக அளித்த வாக்குறுதி என்ன? கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் வழங்கப்படுகிறது. அதாவது 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட சுமார் 20,000 ஆசிரியர்களுக்கு, அவர்களுககு முன்பு பணியில் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. சமமான வேலை மற்றும் ஒரே விதமான பதவியை வகிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே வித்தியாசமான அடிப்படை சம்பளம் ர்னிக்கப்பட்டது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், 311வது கோரிக்கையாக, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னை சரிசெய்யப்படும், பாதிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது 

நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா

  நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா கடவுள் என் தூரத்து காதலியாக இருந்து விட்டு போகலாம்  அவள் எனக்கு கடிதம் அனுப்பப் போவதில்லை  முத்தங்களை தரப்போவதில்லை என்னை அணைக்கப் போவதில்லை என் பசியை ஆற்றப் போவதில்லை என் பணத் தேவைகள் எதையும் அவள் செய்யப் போவதில்லை அவ்வப்போது என் உளவியலில் சமநிலை தவறுதலை வேண்டுமானால் சரி செய்து கொண்டிருப்பாள் ஒரு தூரத்தின் சமவெளியில் பச்சை நிற சுடிதார்கள் எல்லாம் என் காதலியை ஞாபகப்படுத்தலாம் மல்லிகை வாசங்கள் எல்லாம் அவள் வாசமாகவே மாறிப்போனது நேற்று எனக்காக பரிந்து பேசிய இரண்டு நண்பர்களை கடவுளின் தூதனாகவே நான் பார்க்கிறேன் என் ரத்தத்தை துடைத்து பசியாற்றி என் துக்கங்களோடு பகிர்ந்து கொண்ட ஒரு சகோதரனின் பதற்றத்தில் யாரைக் காண்பது என் துக்கங்களை விசாரித்துக் கொண்டிருந்த தோழியின் உள்ளங்கை ஈரத்தில்  யாரை நினைப்பது.... கடவுள்கள் போதும் வருவதில்லை அவளைப் போலவே இருவரும் ஒன்றுதான்  பருப்பொருள் அல்ல நினைவுகள் ஏக்கங்களின் கற்பனை உருவங்கள் நாத்திகம் கடவுள் மறுப்பா  இல்லவே இல்லை  நாத்திகம் மத மறுப்பு....

ஜனநாயகம்

 சமூக ஜனநாயகம் உருவாகாமல் அரசியல் தாக்கத்தில் பெரும்பான்மையின் அழுத்தங்களை குறைக்க முடியாது , இந்தியாவைப் பொறுத்தவரையில் சமூக ஜனநாயகம் உருவாவதற்கு இங்கு இருக்கும் பிரிவினைகளின் சிக்கல்களை தீர்த்தாக வேண்டும், இனம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து  சாதி உட்பிரிவுகள் என ஆயிரக்கணக்கான பிரிவினைகளை ஒன்று கூட்டாமல் சமூக ஜனநாயகம் சாத்தியம் இல்லை. சமூக ஜனநாயகம் சாத்தியமில்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒருபோதும் சாத்தியமில்லை அங்கு பெரும்பான்மையே நிலை நிறுத்தி இருக்கும் இந்தியா என்று ஒன்று கூடி இந்த ஆசிய துணை கண்டத்தில் சொல்ல ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகியும் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது ,அதேபோல் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டும் தமிழ்நாடு பொருத்தவரையில் மொழியால் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது..... இதுவரையில்  மொழி ஒரு தனிமனிதனுக்கு எந்த விதத்தில் நன்மை பயக்குறது என தெரியவில்லை, அல்லது ஒரு சமூகத்திற்கு என்ன பயனை தருகிறது எனவும் தெரியவில்லை மொழி என்பது அடையாளம் அல்ல இந்த பிரபஞ்சத்தில் உயிர் என்பதைத் தவிர ஒன்று கூடலுக்கு வேறு எந்த அடையாளங்களும் இல்லை என்பதே உண்மை... மொழி வெறும் தொடர்பு கரு