Skip to main content

Posts

Showing posts from 2011
யாரென்றே  தெரியாத ஒன்றினுள் தன்னைக் காண்பதே _காதல்

FIRST LOVE

நிர்வாணமாய் உன்னுடன் உருளவும் ஆசையில்லை உன் அன்பு தேவை இல்லை இன்னொருவனுடன் நீ இருப்பதில் தயக்கமில்லை உன் அழகும்,சிரிப்பும் ஒன்றும் செய்யவில்லை உன் பேச்சிலும்,பார்வையிலும் துண்டுதல் இல்லை இருப்பினும் ஏனோ நீ மட்டும் என் அருகில் வேண்டும் தெரியவில்லை..............

MY LOVE

சதை, சமுதாய தேவைகளுக்கு  உட்பட்டதாய் இல்லாமல் எலும்புக்கூடாய் இருப்பினும் அகன்று போகாத ஆணிவேர் MY LOVE. புரிதலே இல்லாமல் எனக்குள் புதுக்குடித்தனம் நடத்தும் நீ ........ தரிசனம் தராது தளையறுத்து போனாலும் சாகாது MY LOVE. ஒன்பது மனைவிகளை கொண்டிருந்தும் ஆதவன் பூமியை நேசித்தது விந்தைதான் ஆடையின்றி உலாவரும் பெண்கள் கூட்டத்தில் ஊர்ந்து வரும் என் காமம் உன்னை தேடுவதால் சிறந்ததுதான் .......... MY LOVE.

வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும்

அன்பைப் போல் அதிகாரம் செலுத்துவது ஒன்றுமில்லை கொடியதுமதுதான், அது எதிர்பார்பதில்லை  தன்னையே வருத்திக்கொள்ளும்  தன் தேவைகளுக்காய் செய்யாமல் தருவதிலேயே இன்பம்காணும்  செய்வது கர்வமெனினும் எதிர் பார்ப்புகள் இல்லாததால் அன்பாகிறது இன்பமாகிறது  அழும் அழவைக்காது. நேசித்து பாருங்கள் அதை விட அழகானது ஒன்றுமில்லை  உள்ளே நரம்பின் அணுக்களில் குடையும்  வாழத்தொன்றும் ,வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும்  பைத்தியத்தின் முத்திய நிலை அன்புதான்  அது தெய்வீகமானது ,கிறுக்கு மிகவும் உயர்ந்தநிலையில் ஓன்று ஒன்றின் மீது உள்ள பற்றோ ,ஆசையோ ,ஈர்ப்போ,கவர்ச்சியோ அல்ல  காந்தம் போன்றது அன்பு அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் அரவணைக்கும்  அதிகாரம் செலுத்தாது அபபடிசெலுத்துவது சுயனலமாகும் தொற்றுபோகும். கட்டுப்பாடுகள் இருக்காது கவலைகொள்ளாது கண்ணீரையே விரும்பும்  அசிங்கம் தெரியாமல் காயத்தில்  வடியும் சலத்தை நக்கும் நாயைப் போன்றது அன்பு  எதுவும் தெரியாது அதனால் தான் சொன்னேன் அன்பு பைத்தியமென்று  உள்ளே நுழைந்து பாருங்கள் துக்கமேன்பதே இல்லை  மொத்த தத்துவமும் அன்புதான்  சேமிப்பு என்பது இல்லாமல் வாழ்ந்தோமானால்  அன்

முளைகலற்று சமமாக

நடிகையின் நீச்சல் உடை புகைப்படத்தில் மூழ்கி நீந்தினான் இளையசகோதரன். முத்தமிட நினைக்கையில் என் நிழல் எட்டி தடுத்து விட்டது மறைத்து வெளியேறிவிட்டான் மறுநாள் அப்புகைப்பட முகத்தில் சில திருத்தங்கள் மூக்கு மேல் நோக்கியும் முளைகலற்று சமமாகவும் காது திரும்பியும் புருவமற்று இருந்தது முகம் சுளித்து அதை சதைத் தெரிந்தான் சதை அதேதான் அழகு எண்ணத்தில் இருந்ததால்!

பெலிக்ஸ்_ஹார்மோன்

என்னை யாரும் குறை கூறியதில்லை காரணம் நான் யாரைப்பற்றியும் குறைவாய் பேசுவதில்லை  என் வெற்றி யாரையும் காயபடுத்துவதாய் இருந்தால் அது தோல்விதான் என் தோல்விகள் கூட யாரையும் காயபடுத்துவதாய் இருக்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் எதிரிகள் இருக்க விரும்பவில்லை ஆனால் அவர்களே எனது சிறந்த நண்பர்கள் பாவம் ,துரோகம் என்பவையெல்லாம் நம்பிக்கை இன்மையாலேயே வருகிறது நம்பிக்கை எனக்குஇல்லை காரணம் எதிர் பார்ப்புகள் எனக்கில்லை ஆதலால் எந்த குரோதமும் என்னுலில்லை. நான் உன்னைப்போன்றே இருக்கிறேன் காரணம் நீ என்னை பார்க்கும் பிம்பமே எனது வெளிப்பாடு ___________பெலிக்ஸ் ................

மாமிசத்தின் பசி

என் தேவைகள் எதை பொருத்து தீர்மானிக்கப்படுகிறது, என் மாமிசத்தின் பசியா? என் கொள்கைகள் யாரை பொருத்து உள்ளது நான் செய்ய துடிப்பதும் செய்யாமலிருக்க வாஞ்சிப்பதும் என்ன எவையின் வழிப்பாதை. ஏன் யாரையோ பொருத்து சிந்தித்து கொண்டிருக்கிறேன் எனக்கான அன்றய தேவையை எதற்காக பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் வாழவேண்டும் வரைமுறை உள்ளது சுதந்திரமா நான் மனிதனாய் வாழவேண்டுமெனில் குடும்பம் என்பது அல்லது சந்தோசத்தில் வரைமுறை என்பது இருக்ககூடாது. தவறு என்பது கொலை மட்டும்தான்.அதை மட்டும் செய்யாமலிருந்தாலே போதுமானது. மற்றயவை எல்லாம் பியித்து உடைத்திடவேண்டும்

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது
மிருகங்களையே முதலில் படைத்த இறைவன் அவைகளின் காம ,பாச விளையாட்டுக்களை கண்டு தானும் கிடந்தது புரண்டு ஆட ஆசை பட்டதால் வந்த விளைவுதான் ஆணும் பெண்ணும் . எனவே காதலியுங்கள் ,அன்புகொள்ளுங்கள் காமத்தை கொண்டாடுங்கள் . நம் சமுதாயம் காமத்தை ஒதுக்கி குழந்தை பேற்றுக்காக மட்டும் என்று வைத்து விட்டது . நம்மை அறியாமலே காமத்தை எவ்வளவு தூரம் வெறுக்கிறோம் . நம்முடைய மரபணுவில் அதிகமான தாக்கத்தை அது ஏற்படுத்தியிருக்கிறது பழைய கலாச்சாரத்தை மனிதன் சீக்கிரம் அடைந்து விடுவான் .குடும்பம் அழிந்து விட்டது என்றால் மனிதஇனம் உருப்படும் .தத்துவ ஞானி சாக்கரடீஸ் சொன்னதுபோல் எல்லோருக்கும் எல்லோரும் கணவன் மனைவி என்று வேண்டும் .இந்தநிலையில் விருப்பு போதாமை பொறாமை ஒழயுமென நினைக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள் ? அழகு என்பது கூட மறைந்து விடும் !உண்மை தானே

கீதையுடன் ஓர் இரவு கண்விழித்தேன்

கீதையுடன் கொண்ட உறவில் நான் அதைப்பற்றி அதிகமாக அறியமுடிந்தது ,அதன் உள்ளே முழுவதும் செல்ல வழிகிடைத்தது  அதனுடைய முக்கிய போதனையான.போதனை முறையான அர்ஜுனன் எதிரிகளை கொல்ல முற்படுதல். வேண்டுமா? வேண்டாமா? இத்தனை உயிர்களை பழிவாங்கி வாழவேண்டுமா ? தான் ஒன்றுமில்லை என்பதும் ,வாழ்வு அதாவது ராஜ்யபாரம் கிடைத்துத்தான் என்ன பயன் என்றும் அர்ஜுனன் எண்ணியிருக்க வேண்டும்  அர்ஜுனன் ஒரு தெளிந்த தத்துவ நோக்கில் வாழ்வை பார்த்துள்ளான்.ஆனால் கிருஷ்ணன் கூறுவது தன்னை நம்பியவர்களை பற்றிதான். ஆகவே கிருச்னனுடைய பார்வை சதை அல்லது உலகை சந்தோசத்தை பற்றியதாக உள்ளது. தப்பில்லைதான் இருப்பினும் கூட இந்த கீதையானது  உலக வாழ்வில் சாதிக்கவே கற்ப்பிக்கிறது காரணம் ஒழுக்கத்தை பற்றி குறிப்பிடுகிறது.உபநிசத்தில் ஞானிகள் ஒழுக்கத்தை குறிப்பிடவேயில்லை  அப்படியிருக்க கீதை உபநிசத்தை கறந்து தருகிறது என்பதில் ஞாயமில்லை. சோ என்னனா கீதை ஒரு வாழ்க்கை அதாவது கட்டுப்பாடான ஒரு சமுதாயத்தை  உருவாக்க இடையில் செருகப்பட்டது.மற்றும் உபநிச தொடர்புடையது என கூறவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவுமே பயன்படுத்தியிருக்கிராகள்  ஆண் ஒருவனு

வயதுக்கு வந்ததால்!

கோன்ஐசும் கோலி குண்டும் நிறையவே கிடைக்கும் , மிதிவண்டியின் பின்னால் அமரவே அதிக வாய்ப்பு கிடைத்தது எனக்கோ சிறு ஏக்கம் உண்டு வயது மூத்தவர் களை எல்லாம் பார்க்கும் போது பெரிய ஏக்கம் உண்டு எங்கள் ஊரின் வழியாய் செல்லும் ரெயிலும் ,பேருந்தும் எனை அதிகம் சுமந்ததுண்டு பனை ஏறு பாவனையும் ,தெருவிளக்கு கம்பத்தில் ஏறு பாவனையும் அதிகம் கண்டதுண்டு நிலவை உரசும் விமானம் அடிக்கடி பார்ப்பதுண்டு அப்பாவை பார்க்கும் போதெல்லாம் சிறு ஏக்கம் உண்டு ! சரி தவறு தெரியாததால் போலிஸ் ,திருடன் இருவரில் செயிப்பவரையே அதிகம் பிடிக்கும் அதிலும் சிறு ஏக்கம் உண்டு அத்தனை ஏக்கமும் நிறைவேறி வெறுத்து துக்கப்படுகிறேன் எதுக்குதான் பெரியவனா வளந்தேனோ சின்ன பையனாவே இருந்திருக்கலாம் என . மற்றுமொரு ஏக்கம்! உலகம் எனை ஏமாற்றுகிறதா தெரிய வில்லை ! கருவறையில் துடித்தேன் உதைத்தேன் உலகைகான ஏக்கப் பட்டேன். சில பொருளுக்காய் உணர்வுகளுக்காய் ஏக்கப் பட்டேன் முடித்து விட்டு மீண்டும் கருவறைக்கே ஏக்கப் படுகிறேன் உலகம் எனை ஏமாற்றுகிறதா தெரிய வில்லை !

மது என் காதலி

சனமெல்லாம் எழும்முன்  அவளைக்கான ஆசைப்படுகிறேன் தெருவிளக்கு அணையும்முன் அவளை ஒருமுறை இறுக்கி அணைக்கிறேன் சூரியன் பார்க்கும் முன் கண்னோளியால் தடவிவிடுவேன் துங்கும் முன் ஒருமுறை குடித்திடுவேன் இடையில் விழித்தெழுந்தால் மறுபடியும் மூச்சுத்திணற குடித்திடுவேன் அவளுடன் உறவு கொள்ளும் போ தெல்லாம் எனை மறந்து விடுகிறேன் உச்சத்தின் போது எனையிழந்து செயலிழந்து மயங்கி விடுகிறேன் எத்தனை நோய்க்கு அடிப்படை எனினும் முத்தமிட்டு விழுங்குவேன் கசப்பாய் இருந்தும் உன்னை நேசிப்பதால் பத்து கட்டளைகளில் ஒன்றை கடைபிடிக்கிறேன் உன்னை தினமும் நினைப்பதே நோயாகிப் போனதெனக்கு என் உயிரை வாங்கும் சரக்கு (ஆல்கஹால்). உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் பெண் நீதான் எத்தனை புருஷன்மார்கள் உனக்கு கணக்கில்லை அதற்க்கு உண்மையை காக்கவைக்கும் அரும் மருந்து நீதான் சுகத்தினூடே மரணத்தைக் கொடுக்கும் கடவுளும் நீதான் பெருத்த சோகத்தில் ஆறுதல் நீ மட்டும் தான் உயிருள்ள நாளளவும் உன்னுடன் படுத்திட நினைத்தேனே வாதம் கொடுத்து வணக்கமிட்டு சென்றுவிட்டாயே ! அதிகம் உனை நேசித்ததாலா இந்ததண்டனை இனியவளே உ
ஏன் ஒருத்தியை மட்டும் காதலிக்கிறேன் அவள் என் அருகில் இருந்திருந்தால் முத்தமிட்டு இருப்பேன் தனியறையில் அமர்ந்திருந்தால் உடலுறவு வைத்திருப்பேன் காதலிக்கும் போது காமம் முளைவிடாமலில்லை வானம் காதலென்றால் காமம் நிலவைப் போல் இருந்தது அது சூரியனாய் மாற இடம் தறவில்லை ஆனால் பார்வையில் நாங்கள் நிர்வாணமானோம் ! பனித்துளிப் போல சுருங்கி சிலநேரம் பிரபஞ்சமாய் வெடித்து சிதறினோம் ஒவ்வொரு பெண்ணும் காமத்தை விதைகிறாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நான் காமத்தை விதைக்கிறேன் ஆனால் அவளிடமிருந்து மட்டும் சமிஞைகள் வருகிறது அவளை காதலிக்கும் முன் அவளும் எனக்கொரு உபப்பொருள் தான் . அவளை தேடுகிறேன் என் தனிமையை களவாடிக் கொள்கிறாள் ! எல்லா பெண்ணின் அழகையும் ரசித்தாலும் அத்தனை ஆசைகளையும் அவளுடன் நடத்த திட்டமிட்டதால் ! அவளை தேடுகிறேன்

ஏன் ஒருத்தியை மட்டும் காதலிக்கிறேன்

அவள் என் அருகில் இருந்திருந்தால்  முத்தமிட்டு இருப்பேன் தனியறையில் அமர்ந்திருந்தால் உடலுறவு வைத்திருப்பேன் காதலிக்கும் போது காமம் முளைவிடாமலில்லை வானம் காதலென்றால் காமம் நிலவைப் போல் இருந்தது அது சூரியனாய் மாற இடம் தறவில்லை ஆனால் பார்வையில் நாங்கள் நிர்வாணமானோம் ! பனித்துளிப் போல சுருங்கி சிலநேரம் பிரபஞ்சமாய் வெடித்து சிதறினோம் ஒவ்வொரு பெண்ணும் காமத்தை விதைகிறாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நான் காமத்தை விதைக்கிறேன் ஆனால் அவளிடமிருந்து மட்டும் சமிஞைகள் வருகிறது அவளை காதலிக்கும் முன் அவளும் எனக்கொரு உபப்பொருள் தான் . அவளை தேடுகிறேன் என் தனிமையை களவாடிக் கொள்கிறாள் ! எல்லா பெண்ணின் அழகையும் ரசித்தாலும் அத்தனை ஆசைகளையும் அவளுடன் நடத்த திட்டமிட்டதால் ! அவளை தேடுகிறேன்

நிர்வாணம்

காமம் நிர்வாணத்தை மறந்து விடுகிறது பெண்ணின் முன்னாள் தனிமையில் நிர்வாணம் அழகாகிறது வெட்கம் பறந்து விடுகிறது மானம் எங்கோ தெரியவில்லை அத்தனையும் முடித்து விட்டு முகப்பூச்சுடன் வெளியேறும் போது எங்கிருந்து தான் வருமோ நல்லவன் என்ற முகத்திரை இதில் அடுத்தவனை வேறு குறை சொல்லுவது!

நான் கடவுளானால்

நான் கடவுளானால் என்னை வணங்கு பவர்களை கொன்றுவிடுவேன் வரம் கேட்கும் மடையனை தீயிலிடுவேன்_மற்றவனை குறை சொல்லும் சனியனை ஊமை யாக்குவேன் _தேவை இல்லாத கட்டுபாடுகளை ,கோட்பாடுகளை அவிழ்த்தெரிவேன் ஆடை கண்டுபிடித்தவனை முதலில் அறுத்தெறிவேன் தன்னை மட்டும் நேசிக்கும் தன்னலமில்லாத வனை நான் வணங்குவேன் ஏனென்றால் நானே சுயநலவாதி

வார்த்தை

சொல்வதென்னவோ சின்ன வார்த்தை தான் செய்வ தென்னவோ பலமான விளைவு உடைந்துவிடுகிறது , சில மாதங்களில் இலையில் படிந்த பழைய படிமங்களை எடுத்து வரும் மழைத்துளி போல சில சமயம் உன் சமுதாய சீழ்படிந்த சாயங்கள் உடைத்து விடுகிறது வாழ்வை

காமத்தைப்போல்

பெருமை என்பது மனிதனுக்கு இருக்கிற குணங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது   அது காமத்தைப்போல் மனிதனை அதிகம் ஆதிக்கம் செலுத்தககூடியதும் கூட   காமத்தை கையாளும் அளவுக்கு பெருமையை கையாள மனிதனுக்கு எதுவும் கற்றுத்தரவில்லை.   மிகவும் கொடியதும் கூட   தன்னடக்கம் என்பதும் ஒருவகை பெருமைதான். தன்னைப்போல் பிறரையும் நேசி என்பதுகூட ஒருவகை பெருமைதான். இவையெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது

ஏன் ஒருத்தியை மட்டும் காதலிக்கிறேன்

அவள் என் அருகில் இருந்திருந்தால் முத்தமிட்டு இருப்பேன் தனியறையில் அமர்ந்திருந்தால் உடலுறவு வைத்திருப்பேன் காதலிக்கும் போது காமம் முளைவிடாமலில்லை வானம் காதலென்றால் காமம் நிலவைப் போல் இருந்தது அது சூரியனாய் மாற இடம் தறவில்லை ஆனால் பார்வையில் நாங்கள் நிர்வாணமானோம் ! பனித்துளிப் போல சுருங்கி சிலநேரம் பிரபஞ்சமாய் வெடித்து சிதறினோம் ஒவ்வொரு பெண்ணும் காமத்தை விதைகிறாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நான் காமத்தை விதைக்கிறேன் ஆனால் அவளிடமிருந்து மட்டும் சமிஞைகள் வருகிறது அவளை காதலிக்கும் முன் அவளும் எனக்கொரு உபப்பொருள் தான் . அவளை தேடுகிறேன் என் தனிமையை களவாடிக் கொள்கிறாள் ! எல்லா பெண்ணின் அழகையும் ரசித்தாலும் அத்தனை ஆசைகளையும் அவளுடன் நடத்த திட்டமிட்டதால் ! அவளை தேடுகிறேன்.

சிவன் என்பவன் யார் ?

சிவன் ஏன் சாலமொனிடம் [பைபிள் ] இருந்து தன யோக கலையினை கற்றிருக்க கூடாது யோகாவினால் காமத்தை வளர்ப்பதுதான் சிவனின் நோக்கம் பார்வதிக்கு அது தேவையா அது தெரிய வில்லை ஆனால் பெண்களும் யோகாவினை கற்றிருக்கின்றனர் மனிதன் தன் உறுப்பினை வணங்க காரணமென்ன ? அங்கெ குழந்தை பிறப்பு என்பது கடவுளுடன் தொடர்புடையது ! என்ற நம்பிக்கை இருந்து வந்துள்ளது . [மனிதனுக்கு ஆறாவது அறிவு, காமத்தின் மீது இருந்த அதீத பற்றுதலினால் வந்தது என்பதில் உறுதியாக இருக்கிறேன் ] அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் காமம் மட்டும்தான். இந்து மதம் காமத்தை வெறுக்க வில்லை அப்படியானால் யோகாவானது உடலுறவினை முழுமையாக செய்யவே பயன்ப்டுத்தபட்டிருக்க வேண்டும் . பின் சமணமே பிரிவினையை உருவாக்கியது . ஏனென்றால் அதற்க்கு பிறகு கிறித்துவம் சிவனுடன் தொடர்பு கொள்ளவில்லை

இரவு

சாப்பாட்டிற்கு இடப்படும் வாசனைப் பொருள் போலத்தான் அழகு ! என ஒரே இரவில் உணர்ந்தேன்

மது என் காதலி

சனமெல்லாம் எழும்முன்  அவளைக்கான ஆசைப்படுகிறேன் தெருவிளக்கு அணையும்முன் அவளை ஒருமுறை இறுக்கி அணைக்கிறேன் சூரியன் பார்க்கும் முன் கண்னோளியால் தடவிவிடுவேன் துங்கும் முன் ஒருமுறை குடித்திடுவேன் இடையில் விழித்தெழுந்தால் மறுபடியும் மூச்சுத்திணற குடித்திடுவேன் அவளுடன் உறவு கொள்ளும் போ தெல்லாம் எனை மறந்து விடுகிறேன் உச்சத்தின் போது எனையிழந்து செயலிழந்து மயங்கி விடுகிறேன் எத்தனை நோய்க்கு அடிப்படை எனினும் முத்தமிட்டு விழுங்குவேன் கசப்பாய் இருந்தும் உன்னை நேசிப்பதால் பத்து கட்டளைகளில் ஒன்றை கடைபிடிக்கிறேன் உன்னை தினமும் நினைப்பதே நோயாகிப் போனதெனக்கு என் உயிரை வாங்கும் சரக்கு (ஆல்கஹால்). உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் பெண் நீதான் எத்தனை புருஷன்மார்கள் உனக்கு கணக்கில்லை அதற்க்கு உண்மையை காக்கவைக்கும் அரும் மருந்து நீதான் சுகத்தினூடே மரணத்தைக் கொடுக்கும் கடவுளும் நீதான் பெருத்த சோகத்தில் ஆறுதல் நீ மட்டும் தான் உயிருள்ள நாளளவும் உன்னுடன் படுத்திட நினைத்தேனே வாதம் கொடுத்து வணக்கமிட்டு சென்றுவிட்டாயே ! அதிகம் உனை நேசித்ததாலா இந்ததண்டனை இன

புல் (ஆல்கஹால் )

நரகத்தில் எனை தள்ளி, பவ்வியமாய் சொர்க்கத்தில் மிதந்துருளும் என்கணவா! ஆசை இன்றியே ,முரட்டு காமத்திற்கு எத்தனை தடவை இனங்கிஇருப்பேன் ஆசைகளை எல்லாம் துறந்தேன் சத்தியமாய் சொல்லுகிறேன் மார்கழி மாத இரவிலும் நித்திரைக்கு பயப்படுகிறேன் மன்னவன் தலை குனிந்தே வருவான் முத்தத்தால் நனையவேண்டிய முந்தானையில் மலக்கிடங்கை ஊரெல்லாம் சுமந்து வந்து என் முதுகிலே கொப்பளிப்பான் மல்லிகையும் மணம் நொந்து போகும் அளவுக்கு வாசனையும் தருவான் . அனேக நேரங்களில் , மனைவியையே பலாத்காரம் செய்த முதல் கணவன் நீயாகத்தான் இருக்க முடியும் . பல முறை சொல்லியும் எனது மூக்கும் கேட்டகவில்லை உனது வாயும் கேட்க்கவில்லை புல் (ஆல்கஹால் )ஆனாலும் புருஷன் என மாற்றிக்கொண்டேன்!

நாளை

எதிர் காலம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் இன்றைய புரிதலும்,செயலும் தான் நாளைய பொழுது , நாளைக்காக இன்று விதைக்கிறேன் நாளை அறுவடை செய்யப் போகிறேன் ! நாளை என்பது விளைவு தான் !

சுமையும்தான்

என் எதிர்காலச் சுமை ஒன்றை இறக்கிவைத்து விட்டேன் உன்னை காதலிப்பதால் நிகல் காலச் சுமையில் பல ஏற்றி வைத்திருக்கிறேன் உன்னை காதலிப்பதால் ! சுகம் என்றதும் எண்ணம் சுமப்பது இணைப்பைத்தான் எனக்கோ உன் கண்களில் தெறித்து விழும் பார்வைச் சுகம்தான் சுமையும்தான் !

உன்னை போல் பிறரையும் நேசி

புளிப்பின் சுவை தெரியாமலே , மாங்காய் புளிக்கும் என்பது எவ்வளவு முட்டாள் தனமோ ! அதுபோலவே நம் வாழ்வின் பொருள் தெரியாமலே வாழ்வதும் பிதற்றுவதுவும் , வாழ்வில் முழுமைபெறாததும்! அப்படியானால் நாம் வாழ்வது கற்பனை,கனவில்தான். [உண்மை ,நினைவு ,சுயம் ,நிஜம் ] என்பது தெரிந்து செய்வதுதானே இந்த பொய்யான வாழ்வுக்கே எத்தனை முகங்களை ஒரு மனிதன் வெளிப்படுத்துகிறான். நடிப்பதை நிறுத்துவோம் . உன்னை போல் பிறரையும் நேசி {[இந்த சின்ன வார்த்தைக்குள் அத்தனையும் முடிந்து விடுகிறது ]} அப்படியானால் உன்னை நேசிக்கிறாய். இல்லையேல் உன்னையே நீ உணரவில்லை.

முத்தம்

வழுக்கட்டாயமாய்_ நான் கெஞ்சி வாங்கும் முத்தத்தை விட எண்ணமில்லா நிலையில் வழுக்கட்டாயமாய் _ நீ கொஞ்சி கொடுக்கும் முத்தம் சுகத்தின் மொத்தம் !