மனிதனாய் பிறந்த அத்துனைபேருக்கும் ஏதாவதுஒரு தருனத்தில் போழுது விடிகையில் அல்லது கரைந்து விழுகையில் ஒரு கவிதையின் முகம், கவிதையின் தடமாவது முன்னே விரிந்து சுருங்கி போய்இருக்கும், வெந்தரையில் இல்லாத முந்திரி தோப்பை கொண்டுவரும் மாயவித்தை, பார்க்காத காதலியை ஆடைக்குள் அமிழ்த்தி வைக்கும் திறமை என கவிதையின் முகம் அகன்டது. கவிதைகளுக்கெல்லாம் அழகும் அசிங்கமும் உண்டாயென்றால் வினாதான் முளைக்கிறது, சில கவிதைகள் மூக்கும் முழியுமாக பூவும் பொட்டும், புனைவும் டையும் சூவும் வைத்து அலங்கரிக்கப்படும். இலக்கியங்களில் சந்தம் சாரியை தொடை தளை ஓசை என மொழியை உருட்டி திரட்டி முகசாயமெல்லாம் பூசி வைக்கப்பட்டிருக்கும், தேவையா தேவையில்லையா என்பதை விட, எந்தமாதிரியான சூல்நிலைமைகளில் எழுதப்படுகிறது என்பதே? எதற்கு? மொழி என்ன வேலையை செய்கிறது, அழகியல் எங்கெல்லாம் உட்கார்ந்துள்ளதோ அங்கெல்லாம் பிளவும் ஆனவமும் மேட்டிமையும் இருக்கதான் செய்யும் அழகு அபத்தமானது அதிகார நார்கக்காளியை தலையில் சுமந்து திரிவதுதான், நடை, பாவனை, காது, தொண்டை என மின்னிக்கொண்டுதான் இருக்கும் , இது அபத்தம் இதை உடைத்து எறிந்தது புதுக்கவிதைகள் தாம் ரியலிஸம், மேஜிக்ரியலிஸம், மினிமலிஸம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என தன் வால் நீள்கிறது. எப்பொழுதும் மொழியும் அதனை சார்ந்த வடிவமும் மனிதனுக்கானது அவனது கீழ்தளத்தை நொறுக்க வெளிப்படுத்த உரியனவே எந்த அதிகார பகிர்வுக்கும் ஈட்படுத்துவது அபத்தம்தான்
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Comments
Post a Comment