வர்க்கத்தின் தோற்றம் வேண்டுமானால்
ஒரு புள்ளியிலிருந்து வந்திருக்கலாம் அதன் மனநிலையும் சில இடங்கலில் ஒற்றுமையாகலாம் மற்றும் கவனிக்க தக்கது அதன் பரிணாமம் நிலத்துக்கு
ஏற்ப ஒரு கூட்ட ஜனத்தின் தந்திர சூல்சியுடன் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது, பிரிவினையின் பரிணாமங்களில் இந்திய பரப்பு விசித்திரமானது,
அம்பேத்கரின் பார்வை இவ்வாறாக தெரிகிறது இந்திய பிரிவினை பொருலாதாரத்துக்கானது எனினும்
அதன் சிக்கல் நுணுக்கம் சமூக வடிவமைப்பெல்லாம் மதத்தின் தலையீடே பிரதானமாய் உள்ளது,
கட்டுப்பாடுகளும கோட்பாடுகளும் மற்ற நாடுகளில் இல்லாதைப் போல கடவுளுடன் இனைந்து சடங்காக
கடைமையாக உருசெய்யப்பட்டுள்ளது,வர்க்கம் தீண்டாமை எனும் பெயரில் கானப்படுவதே ரத்தம்
நாளம் ஜீன் உளவியள் கருத்தியல் தன்மானம் வீரம் பெண் கொளரவம் என நீள்கிறது சாதியின்
முகம், பெண் சதை மீதான மய்யப்பட்ட கலாச்சாரம்
கலந்து கிடக்கும் சமூகத்தில்,உறவு இனம் என திருமன சடங்காச்சாரமும் பெண்ணை மையப்படுத்தியே
பிரிவினையின் சூல்ச்சி கருகொண்டுள்ளது, இந்திய மண்ணின் வினோதம்தான், மூட நம்பிக்கையில்
சாதியமும் ஒன்றாக்க இந்துத்துவ சீர்திருத்த வாதிகள் செய்தார்களா எனில் இல்லை, தீண்டாமையை ஒழிக்க முனைந்தவர்கள் கூட அதன் உடலான இந்துத்துவத்தை அதன் மூளையான
சாதியை உடைக்க முன்வரவில்ல. முதலாலித்துவமும் ஒவ்வொரு மனிதனையும் தனிமைப்படுத்தி வைதிருப்பதைப்
போல இந்துத்துவம் மனித உடலை மற்றவற்றிலிருந்து மத ரீதியில் மனுனீதியால் தனிமைபடுத்தி
பிரித்தாளும் சூழ்சியினை இன்றும் செய்து வருகிறது உலகம் உருவாகும் மூலத்தையே கூறுபோட்டு பிளந்துவைத்துள்ளது, சுதந்திர போராட்டங்க்களும்,காலனியாதிக்க எதிர் மனனிலைகளும் ஒரு போலி தேசியத்தை உருவாக்கியதே
தவிற உளெதிர்மனனிலையை களைய எந்த சித்தாந்தமும் சிருதுளி என்னமும் இல்லை என்ப்பதே உண்மை,மனித
உடல்கலுக்கிடையேயான இடைவெளியை தகற்த்தெறிய இந்த மன்னில் எந்தவிதமான கருத்தியலோ விடுதலை
இயக்கமோ தேவை இந்தியாவில் இரண்டு விதமான பிளவு நோக்கம் ஒன்றுதான் ,பொருளாதார வர்க்கப்
பிரிவு ,மற்றொன்று கலாச்சார சதை மீதான பிரிவு இந்த கலாச்சார தீண்டாமை சதை பிளவின் சுரண்டல்
அறிவு உடல் உழைப்பு என அதன் அதிகார பரப்பு நீள்கிறது , விடுதலைக்கான உளவியல் இங்கே
தேவைப்படுகிறது , அந்த மனனிலையை ஊக்குவிக்க மார்க்க்ஸ் பலவந்த படுத்த படவேண்டுமெங்கிரார்,
வெறும் புரட்சி இந்திய தளத்தில் செல்லுபடியாகாது ஒரு தளத்தில் மதம் மேலான்மை செய்யும்
போது சோசலிச மதம் என்ற பதத்தை பயன்படுத்தலாம் எங்கிறார் லெனின, ஒரு தடத்தை அது உருவாக்கும்,
இந்த தடத்தை கட்டமைக்கும் முன் வெரொரு மனனிலை வரவேண்டும்,விங்கான பொருள்
முதல் வாதம் மனிதத்தையும் ,சமூக நடைமுரையில் மனித உரிமை பற்றிய வெளிப்பாடும்
தனிமனித உரிமைக்கான தேவையையும் கற்ப்பிக்க வேண்டியுள்ளது இவையாவும் அரசியலில் மதம்
நுலையும் போது பிளவுபட்டே இருக்கிறது, உள்கட்டமைப்பின் சிதைவு அறியாமையாலும்
,பழைமைவாத கிடுக்குபிடியிலும் படிந்துள்ளது ,வெறும் வர்க்கப்போராட்டம் மட்டும்
தொழிளாலளர் ஒன்றினைவு ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான வழியல்ல அதனுடன் இனைந்த
சர்வதிகார மனமாற்றத்திற்க்கு ஒரு கூட்ட சமூகத்தை உட்படுத்துவதும் ,மதத்தின்
இடமாற்றம் ,மத வடிவ மாற்றமும் ,அவன் நம்பிக்கை மீதான சில அசைவுகளும் தேவையென
நினைக்கிறேன் இதில் எந்த மாற்றமும் இல்லாத அரசியல் சுதந்திரமும் இந்திய மனனிலையில்
இருந்து விடுதலையை கொடுக்காது , அரசியல் சுதந்திரத்துடன் பொருளதார சமனிலையும்
தேவையாகிறது எனவே இந்திய நாடாளுமன்ற ஜனனாயக தேர்தல் முரையிலும் மாற்றம் தேவை யாய்
தோன்றும், ஆகவே ஒவ்வொரு தனிமனிதனுக்குமிடையே நிறந்தரமான பிறிவினையை தொற்றுவிப்பதன்
மூலம் குறிப்பிட்ட இனக்குழுக்களை சேர்ந்த கூட்டம் மட்டும் கடமை என்ற பெயரில்
சிந்தனை வளர்ச்சியினை தடுத்து நீண்டகால சுகபோக பொருளதாரத்தை அனுபவிப்பதே நடைமுயாக
செயல்படுத்தப் பட்டுள்ளது ஜனனாயகம் என்ற முறையில் பொருளாதார சுதந்திரம் இல்லாமல்
வாக்கு சுதந்திரம் கொடுப்பதில் மட்டும் நின்றுவிடுகிறது, அது எந்த அசைவும் அற்ற ஒருநடு நிலையான மனநிலையை கொடுக்கும் , மத கட்டுடைப்பை நடத்த
பொதூடைமையை பெரும் கதையாடலுக்குட்படுத்தி ,சோசலிசமதம் என்ற நடைமுறை கதையாடலே
செயலூக்கம் பெற்று புரட்சிக்கான வெடிப்பை தரும்.
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Comments
Post a Comment