மனிதனுக்கான அடையாளம் முக்கியமானதாகவும் அவனது சுய உரிமையின் பிரதானமாகவும் இன்று பல சாரி -களாளும் எடுத்து செல்லப்படுகிறது, இதில் தேசியவாதம், இனவாதம், மதவாதம், சாதியவாதம், மொழி என அதன் பரப்புவிரிகிறது உண்மையாகவே மனிதனுக்கான அடையாளம் ஒரு மாய எண்ணத்தின் விளைவுதான், அதன் தேவையை பொருத்துதான் மனிதனுக்கான உரிமையில் இடம் கொடுக்க முடியும், அடையாளம் நாம் தொடர்ந்து வாழும் தன்மையின் பரினாமத்தை பொருத்தது அது இயல்பிலே உயிரியலுக்கானது, அது தன்னை தன் இடத்திற்க்கு ஏற்ப்ப தகவமைத்துக்கொள்ளும், அடையாளம் என்பது என்னை பின்தொடர்ந்து வருவது அல்லது பொதிவியலானதாக ஒன்றுக்குள் சுருக்குவது அடையாளத்தின் தன்மை, இதை ஏற்றுக்கொள்ள முடியாது மாபெரும் அபத்தம், ஒருமனிதனின் முகவடிவமானால் இடத்தை சார்ந்து அவன் இறக்கும் வரைநீளும் அதுவும் அவன் சந்ததியை தொடர்ந்து விடமுடியாது, அடையாளம் ஒரு ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான்
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Comments
Post a Comment