நாடாளுமன்ற ஜனநாயம் பரவலாக அனைத்து மக்ககளிடமும் வெறுப்பை சம்பாதிக்கிறது, இதன் உள்தோற்ற பிழையினை டாக்டர் அம்பேத்கரின் வழியில் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது, ஒரு சர்வாதிகார நாட்டில் நிலவும் நாடுமன்ற ஜனநாயக எதிர்மனநிலையினைவிட ஜனநாயகத்தின்மீது பற்றுதல் கொண்ட நாடுகளில் அதிகம் வெளிப்படும் காரணம் நாடுளுமன்ற ஜனநாயகம் பொருளாதார ஏற்றதாழ்வுகளில் கவனம் செலுத்த வில்லை மற்றும் அதனுடைய சித்தாந்த மெல்லாம் வலிமையுள்ளவன் வலிமையில்லாதவன் பிளைத்துக்கொள்ள அவர்அவர் வழிவகைகளை தேர்ந்தெடுக்க சொல்கிறது இப்படி இருக்கும் கட்டமைப்பில் ஏழை அல்லது வலிமை இல்லாது உள்ளவர்களின் நிலை மேலூம் வலுவிழந்தே போக நேரிடுகிறது, சமூகபொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயத்தில் வெற்றி பெறமுடியாது, இதற்க்கு ரஸ்யாவை காரணம் காட்டும் அம்பேத்கர் சமூக, பொருளாதார ஜனநாயகம் என்பது அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் என்கிறார், ஆனால் சுதந்திரத்தை தூன்டிய இது சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் இடையே சமநிலையை உருவாக்கவில்லை மாறாக விழைவு சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது, ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கியது, மேலும் அவர் குறிப்பிடுவது அமைப்புமுறையே அனைத்து அரசியல் சமுதாயங்களும் ஆள்வோர் ஆளப்படுவோராக பிறிந்துள்ளதே,இன்றும் கூட இந்த நடைமுறை எந்தபக்கமும் உள்ள அரசியல் கட்சிகளிடம் பெரும்பான்மையாக தெறிகிறது, எனவே இன்றைய நடைமுறையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகார பீடீப்பில் முனைகிறதே தவிற ஜனநாயக படுகொலை வழக்கத்தில் இருப்பதையே கண்டு கொள்ளவில்லை, மக்ககளும் தாங்கள் ஓட்டு போட்டு ஏதோ ஒரு மனித தலையை தேர்ந்தெடுப்பதுடன் ஜனநாயகடைமையை நிறைவேற்றிய பெருமூச்சில் திருப்தியடைகிறார்கள், பரவலாக தென்படும் நாடுமன்ற ஜனநாயக வெறுப்பு மனநிலையை தீர்த்துக்கொள்ளவும் வேறுஎந்த Option னும் இல்லை என்பதே உன்மை.
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Comments
Post a Comment