அனுக் கரு பிளவில்
ஒரு சின்னஞ் சிறு ஒளிகீற்றின் பிறப்பு
எதற்கு என, ஏணி வைத்து காதை குடைகிறது எதற்கு
வலியுடன் பின்னிரவு உறுப்பின் மாபெரும் பிளவில் ரத்தமும் ஜலமுமாய் கிடந்தாய்
தென்கரையில் மூத்தவனும் வலக்கரையில் இளையவனும் கத்தி அழுது சிரிக்கையில் ஐந்து வருட இரவும் விளித்தே கடந்தது
இரண்டு முளை க்காம்புகளும் பால் கொடுத்தே வற்றி வலுவிழந்தது
அவன் மூத்திரமும் மலமும்
இல்லாத வாசனைகளை ஆடைக்குள்ளே தங்க வைத்தது
உனக்கு பயந்தே கொண்ட உடலுறவின் பதபதப்பு தனியபோவதே இல்லை
உன் பிறிவு மூன்று மரங்களை வாய்க்குள் ஊனியது போல. ஓங்கி காற்றடிக்கும் சமயம் உன் கண்சுருக்கம் உயிரை அழுத்தி பிழிகிறது
பகல் முழுதையும் குடித்து விடும் அந்த பரிதவிப்பு
அத்தனை ஏக்கமும் பொத்தி நோக்கும் அரவணைப்பும் எதற்காக
தீ குச்சிதலை யில் தெறிக்கும் தீப்பொறிக்கு
சாம்பலாய் உதிரும் வாழ்வில்
எதற்காக?
ஒரு சின்னஞ் சிறு ஒளிகீற்றின் பிறப்பு
எதற்கு என, ஏணி வைத்து காதை குடைகிறது எதற்கு
வலியுடன் பின்னிரவு உறுப்பின் மாபெரும் பிளவில் ரத்தமும் ஜலமுமாய் கிடந்தாய்
தென்கரையில் மூத்தவனும் வலக்கரையில் இளையவனும் கத்தி அழுது சிரிக்கையில் ஐந்து வருட இரவும் விளித்தே கடந்தது
இரண்டு முளை க்காம்புகளும் பால் கொடுத்தே வற்றி வலுவிழந்தது
அவன் மூத்திரமும் மலமும்
இல்லாத வாசனைகளை ஆடைக்குள்ளே தங்க வைத்தது
உனக்கு பயந்தே கொண்ட உடலுறவின் பதபதப்பு தனியபோவதே இல்லை
உன் பிறிவு மூன்று மரங்களை வாய்க்குள் ஊனியது போல. ஓங்கி காற்றடிக்கும் சமயம் உன் கண்சுருக்கம் உயிரை அழுத்தி பிழிகிறது
பகல் முழுதையும் குடித்து விடும் அந்த பரிதவிப்பு
அத்தனை ஏக்கமும் பொத்தி நோக்கும் அரவணைப்பும் எதற்காக
தீ குச்சிதலை யில் தெறிக்கும் தீப்பொறிக்கு
சாம்பலாய் உதிரும் வாழ்வில்
எதற்காக?
Comments
Post a Comment