Skip to main content
மூன்று நாட்களுக்கு முன்புதான்

அந்த மரத்தடியில், முதன் முதலாக முத்தமிட்டோம் 

இன்றோடு
நான்கு நாட்களாகிறது அவளை காணவில்லை

யோனியிலிருந்து வெளியேறும் குழந்தையின்
நகர்வுதான்
நகர்ந்து கொண்டே இருக்கிறேன் .......
அந்த மரத்தில் இருந்து இலைகளெல்லாம்
உதிந்து கொண்டே இருக்கிறது ..........
பல நேரங்களில் எதையோ " சலசல" த்துகொல்கிறது
வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் இடம் மாறுகிறது
சூரியன் நகரநகர என் சூழ்நிலைகள் இன்னமும் மோசமாகிறது
நான் இன்னமும் அழவில்லை
அந்த மரத்தின் கிழக்கு நோக்கிய கிளையில்
நீண்ட நேரமாக ஒரு காகம் கரைந்து கொண்டிருக்கிறது
அவளை இன்று பார்த்துவிடுவேன் சில வேளையில் காகம்
மிகச்சிறந்த முன் அறிவிப்பாலந்தான் நான்
எழுந்து நிற்க வேண்டும்
அந்த மரத்தில் உள்ள பூக்கள் சில தரையிலும்
தலையிலும் கிடந்தன
என் வலது தோள்பட்டையில் பிசுபிசுத்த திரவம் இருக்கிறது
அதன் நாற்றமும் கததப்பும் உடலுக்கு தெரியவில்லை
அந்த முத்ததின் சூடு தனிவதர்க்குள்........
நான் அழுது விட்டேன்
நான் அழுவேன் ....
ஒரு வேளை தொடரலாம்
அவள் துற தேசம் போயிருப்பாளோ
நான் தனிமை பட்டு போனேன்
இந்த தும்மல் மட்டும்
வந்து கொண்டே இருக்கிறது ...........

Comments

  1. உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்