எல்லோரும் செய்வதையே
செய்து களித்தனர்
என் பெற்றோர்.
எல்லோரும் போலவே மாசமானாள்
என் தாய்
எல்லா ஆண் பிள்ளை போலவே
பிறந்து தொலைந்தேன் ,
சிரித்தேன் ,உண்டேன்
ஆடினேன்
காமமுற்றேன் !
ஆணாய் அழகாய் !
ஆனால்
ஆணையே அழகென்றேன்
எங்கிருந்தோ வந்தது வெட்கம் !
தெரியாமலே சீண்டுகிறது கூச்சம் !
உலகம் ஆண் என்கிறது
உள்ளம் பெண் என்கிறது
மதம் சாபம் என்கிறது
ஆணாய் இருக்க
விருப்பப்படுகிறேன் _அப்பொழுதே
பெண்ணாய் இருப்பதை உணர்கிறேன்
மாநகர வீதியிலே
மனம் நோக சித்தரிப்பார்
மனமில்லா சில மனிதரோ
தனியே வா என வந்தழைப்பர்
கல்வியை இடைமறித்து
கலங்கடிப்பார்
வேலை தரமறுத்து
உள்ளம் வெந்து போக _தீவைப்பர்
தற்கொலை செய்து கொள்ள
தைரியம் கொடுக்க வில்லை
தன் மானத்துடன் வாழ
பால் உறவையும் கொடுக்கவில்லை
அணைத்திடவாவது
ஓர் உயிரைக் கொடுத்தாயா ?
தாயே தள்ளி நிற்க !
யாரிடம் தயவு கேட்டபது ?
கடவுள் மன்னிப்பவரா ? தண்டிப்பவரா ?
கேட்காமல் கொடுப்பது தானம்
கேட்டு கொடுப்பது பிச்சை
இரண்டிலும் பிச்சை ஒட்டி இருக்கிறது
இச் சொல் விடுபட இரண்டுபேரும் திருந்த வேண்டும்
அப்படியானால் உங்கள் கடவுள் ......!?
மனிதர்களே !!!
உங்கள் கடவுள் ஆணும் பெண்ணுமாய்
இருக்கலாம்
நாங்கள் இருந்தால் சாபமா ?
இயற்க்கை
உங்களின் காம பிரதிபலிப்பில்
விளைந்த மக்கள் தொகையை
சமநிலை செய்யவே
எங்களை சம்மதித்திருக்கிறது.
முன் ஜென்மத்தில் நாங்கள்
காம பித்தன் என்றால்
இச் ஜென்மத்தில் நீங்கள் யார் ......?
அப்படியானால் அடுத்த ஜென்மத்தில் ...........?
கடவுள் என்ற பெருமையில்
நீயோ !
காட்சியளிப்பதில்லை
காட்சி அளிப்பவனையும்
ஒழுங்காய் படைக்கவில்லை
எலோருக்கும் உன்படைப்பில்
சிறுகுறை உண்டு
எனக்கோ வாழ்வே குறை !
செய்து களித்தனர்
என் பெற்றோர்.
எல்லோரும் போலவே மாசமானாள்
என் தாய்
எல்லா ஆண் பிள்ளை போலவே
பிறந்து தொலைந்தேன் ,
சிரித்தேன் ,உண்டேன்
ஆடினேன்
காமமுற்றேன் !
ஆணாய் அழகாய் !
ஆனால்
ஆணையே அழகென்றேன்
எங்கிருந்தோ வந்தது வெட்கம் !
தெரியாமலே சீண்டுகிறது கூச்சம் !
உலகம் ஆண் என்கிறது
உள்ளம் பெண் என்கிறது
மதம் சாபம் என்கிறது
ஆணாய் இருக்க
விருப்பப்படுகிறேன் _அப்பொழுதே
பெண்ணாய் இருப்பதை உணர்கிறேன்
மாநகர வீதியிலே
மனம் நோக சித்தரிப்பார்
மனமில்லா சில மனிதரோ
தனியே வா என வந்தழைப்பர்
கல்வியை இடைமறித்து
கலங்கடிப்பார்
வேலை தரமறுத்து
உள்ளம் வெந்து போக _தீவைப்பர்
தற்கொலை செய்து கொள்ள
தைரியம் கொடுக்க வில்லை
தன் மானத்துடன் வாழ
பால் உறவையும் கொடுக்கவில்லை
அணைத்திடவாவது
ஓர் உயிரைக் கொடுத்தாயா ?
தாயே தள்ளி நிற்க !
யாரிடம் தயவு கேட்டபது ?
கடவுள் மன்னிப்பவரா ? தண்டிப்பவரா ?
கேட்காமல் கொடுப்பது தானம்
கேட்டு கொடுப்பது பிச்சை
இரண்டிலும் பிச்சை ஒட்டி இருக்கிறது
இச் சொல் விடுபட இரண்டுபேரும் திருந்த வேண்டும்
அப்படியானால் உங்கள் கடவுள் ......!?
மனிதர்களே !!!
உங்கள் கடவுள் ஆணும் பெண்ணுமாய்
இருக்கலாம்
நாங்கள் இருந்தால் சாபமா ?
இயற்க்கை
உங்களின் காம பிரதிபலிப்பில்
விளைந்த மக்கள் தொகையை
சமநிலை செய்யவே
எங்களை சம்மதித்திருக்கிறது.
முன் ஜென்மத்தில் நாங்கள்
காம பித்தன் என்றால்
இச் ஜென்மத்தில் நீங்கள் யார் ......?
அப்படியானால் அடுத்த ஜென்மத்தில் ...........?
கடவுள் என்ற பெருமையில்
நீயோ !
காட்சியளிப்பதில்லை
காட்சி அளிப்பவனையும்
ஒழுங்காய் படைக்கவில்லை
எலோருக்கும் உன்படைப்பில்
சிறுகுறை உண்டு
எனக்கோ வாழ்வே குறை !

Comments
Post a Comment