Skip to main content

ஆம்பளலேடி ?!













எல்லோரும் செய்வதையே
செய்து களித்தனர்
என் பெற்றோர்.
எல்லோரும் போலவே மாசமானாள்
என் தாய்
எல்லா ஆண் பிள்ளை போலவே
பிறந்து தொலைந்தேன் ,
சிரித்தேன் ,உண்டேன்

ஆடினேன்
காமமுற்றேன் !
ஆணாய் அழகாய் !


ஆனால்
ஆணையே அழகென்றேன்
எங்கிருந்தோ வந்தது வெட்கம் !
தெரியாமலே சீண்டுகிறது கூச்சம் !
உலகம் ஆண் என்கிறது
உள்ளம் பெண் என்கிறது
மதம் சாபம் என்கிறது

ஆணாய் இருக்க
விருப்பப்படுகிறேன் _அப்பொழுதே
பெண்ணாய் இருப்பதை உணர்கிறேன்

மாநகர வீதியிலே
மனம் நோக சித்தரிப்பார்
மனமில்லா சில மனிதரோ
தனியே வா என வந்தழைப்பர்
கல்வியை இடைமறித்து
கலங்கடிப்பார்
வேலை தரமறுத்து
உள்ளம் வெந்து போக _தீவைப்பர்

தற்கொலை செய்து கொள்ள
தைரியம் கொடுக்க வில்லை
தன் மானத்துடன் வாழ
பால் உறவையும் கொடுக்கவில்லை
அணைத்திடவாவது
ஓர் உயிரைக் கொடுத்தாயா ?
தாயே தள்ளி நிற்க !
யாரிடம் தயவு கேட்டபது ?

கடவுள் மன்னிப்பவரா ? தண்டிப்பவரா ?

கேட்காமல் கொடுப்பது தானம்
கேட்டு கொடுப்பது பிச்சை


இரண்டிலும் பிச்சை ஒட்டி இருக்கிறது
இச் சொல் விடுபட இரண்டுபேரும் திருந்த வேண்டும்
அப்படியானால் உங்கள் கடவுள் ......!?


மனிதர்களே !!!
உங்கள் கடவுள் ஆணும் பெண்ணுமாய்
இருக்கலாம்
நாங்கள் இருந்தால் சாபமா ?

இயற்க்கை
உங்களின் காம பிரதிபலிப்பில்
விளைந்த மக்கள் தொகையை
சமநிலை செய்யவே
எங்களை சம்மதித்திருக்கிறது.

முன் ஜென்மத்தில் நாங்கள்
காம பித்தன் என்றால்
இச் ஜென்மத்தில் நீங்கள் யார் ......?
அப்படியானால் அடுத்த ஜென்மத்தில் ...........?

கடவுள் என்ற பெருமையில்
நீயோ !
காட்சியளிப்பதில்லை
காட்சி அளிப்பவனையும்
ஒழுங்காய் படைக்கவில்லை
எலோருக்கும் உன்படைப்பில்
சிறுகுறை உண்டு
எனக்கோ வாழ்வே குறை !

  •                                       _____.......பெலிக்ஸ் 

Comments

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்