காய்ந்த இதயத்தை கண்ணீரால்
நனைத்தவன் நீ
சுருங்கிக்கிடந்த வயிற்றை
சுருக்கெடுத்தவன் நீ
தோழமை என்ற பெயரில் _வந்த
தாயுமானவன் நீ
புரிய முடியாத சோகவாழ்வில்
பருவமழையாய் வந்து போனாய்
நீ தீமையே செய்தாலும் நன்மையாய்
தெறிவதென்ன ?
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்
எனும் பொழுதில்
நீ எனக்கு ஏதாவது செய்துவிடுகிறாய் !
தாய்மை அறிவேன்
காதல் அறிவேன்
நட்பை மட்டும் உணர்ந்தேன்
என்ன எதிர்பார்த்தாய் என்னிடம்
56kgசதை எலும்பை தவிற
ஒன்றுமில்லையே !
தூரமிருந்தே என் துக்கத்தை
துரத்துவது என்ன மாயம்
மொழியின் இலக்கணம் தெரியாதவனே
நட்பின் இலக்கணம் நடைபோடுவதென்ன
கல்வி எதற்கு
அறிவினை திறந்து
மனதினை புதைக்கவா !
மனிதனை இவ்வுலகில்
சந்தித்தேன் என்ற பெருமை
என்றுமே எனக்குண்டு
கலவை இல்லாத நட்பு
என்மீது ஏன் ?
தாய்மைக்கு ஈடான உன் நட்பு
ஆம்
இரண்டாவது முறையாக
நான் உன்னில் கருவுற்றேன்
கர்ணனை பார்த்ததில்லை -நீ
இல்லை என்று சொல்ல _என்
செவிப்பறைகள் கேட்டதுமில்லை !
எங்கிருந்தோ வந்த நான்
இங்கேயே இருக்கும் நீ
இங்கேயே இருக்க
எங்கோ அங்கே நான் போக
நீ ஏன் மறுக்க வேண்டும்
நான் ஏன் தயங்க வேண்டும்
என்ன நடந்து விட்டது நமக்குள்
நனைத்தவன் நீ
சுருங்கிக்கிடந்த வயிற்றை
சுருக்கெடுத்தவன் நீ
தோழமை என்ற பெயரில் _வந்த
தாயுமானவன் நீ
புரிய முடியாத சோகவாழ்வில்
பருவமழையாய் வந்து போனாய்
நீ தீமையே செய்தாலும் நன்மையாய்
தெறிவதென்ன ?
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்
எனும் பொழுதில்
நீ எனக்கு ஏதாவது செய்துவிடுகிறாய் !
தாய்மை அறிவேன்
காதல் அறிவேன்
நட்பை மட்டும் உணர்ந்தேன்
என்ன எதிர்பார்த்தாய் என்னிடம்
56kgசதை எலும்பை தவிற
ஒன்றுமில்லையே !
தூரமிருந்தே என் துக்கத்தை
துரத்துவது என்ன மாயம்
மொழியின் இலக்கணம் தெரியாதவனே
நட்பின் இலக்கணம் நடைபோடுவதென்ன
கல்வி எதற்கு
அறிவினை திறந்து
மனதினை புதைக்கவா !
மனிதனை இவ்வுலகில்
சந்தித்தேன் என்ற பெருமை
என்றுமே எனக்குண்டு
கலவை இல்லாத நட்பு
என்மீது ஏன் ?
தாய்மைக்கு ஈடான உன் நட்பு
ஆம்
இரண்டாவது முறையாக
நான் உன்னில் கருவுற்றேன்
கர்ணனை பார்த்ததில்லை -நீ
இல்லை என்று சொல்ல _என்
செவிப்பறைகள் கேட்டதுமில்லை !
எங்கிருந்தோ வந்த நான்
இங்கேயே இருக்கும் நீ
இங்கேயே இருக்க
எங்கோ அங்கே நான் போக
நீ ஏன் மறுக்க வேண்டும்
நான் ஏன் தயங்க வேண்டும்
என்ன நடந்து விட்டது நமக்குள்
________...........பெலிக்ஸ்

Comments
Post a Comment