Skip to main content

என்ன நடந்து விட்டது நமக்குள்










காய்ந்த இதயத்தை கண்ணீரால்
நனைத்தவன் நீ
சுருங்கிக்கிடந்த வயிற்றை
சுருக்கெடுத்தவன் நீ
தோழமை என்ற பெயரில் _வந்த
தாயுமானவன் நீ
புரிய முடியாத சோகவாழ்வில்
பருவமழையாய் வந்து போனாய்
நீ தீமையே செய்தாலும் நன்மையாய்
தெறிவதென்ன ?

நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்
எனும் பொழுதில்
நீ எனக்கு ஏதாவது செய்துவிடுகிறாய் !
தாய்மை அறிவேன்
காதல் அறிவேன்
நட்பை மட்டும் உணர்ந்தேன்
என்ன எதிர்பார்த்தாய் என்னிடம்
56kgசதை எலும்பை தவிற
ஒன்றுமில்லையே !
தூரமிருந்தே என் துக்கத்தை
துரத்துவது என்ன மாயம்
மொழியின் இலக்கணம் தெரியாதவனே
நட்பின் இலக்கணம் நடைபோடுவதென்ன

கல்வி எதற்கு
அறிவினை திறந்து
மனதினை புதைக்கவா !

மனிதனை இவ்வுலகில்
சந்தித்தேன் என்ற பெருமை
என்றுமே எனக்குண்டு
கலவை இல்லாத நட்பு
என்மீது ஏன் ?
தாய்மைக்கு ஈடான உன் நட்பு

ஆம்
இரண்டாவது முறையாக
நான் உன்னில் கருவுற்றேன்
கர்ணனை பார்த்ததில்லை -நீ
இல்லை என்று சொல்ல _என்
செவிப்பறைகள் கேட்டதுமில்லை !

எங்கிருந்தோ வந்த நான்
இங்கேயே இருக்கும் நீ
இங்கேயே இருக்க
எங்கோ அங்கே நான் போக
நீ ஏன் மறுக்க வேண்டும்
நான் ஏன் தயங்க வேண்டும்
என்ன நடந்து விட்டது நமக்குள்
                                              ________...........பெலிக்ஸ் 

Comments

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்