Skip to main content

புல் (ஆல்கஹால் )

நரகத்தில் எனை தள்ளி,
பவ்வியமாய் சொர்க்கத்தில் மிதந்துருளும்
என்கணவா!
ஆசை இன்றியே ,முரட்டு காமத்திற்கு
எத்தனை தடவை இனங்கிஇருப்பேன்
ஆசைகளை எல்லாம் துறந்தேன்
சத்தியமாய் சொல்லுகிறேன் மார்கழி மாத
இரவிலும் நித்திரைக்கு பயப்படுகிறேன்
மன்னவன் தலை குனிந்தே வருவான்
முத்தத்தால் நனையவேண்டிய முந்தானையில்
மலக்கிடங்கை ஊரெல்லாம் சுமந்து வந்து
என் முதுகிலே கொப்பளிப்பான்
மல்லிகையும் மணம் நொந்து போகும்
அளவுக்கு வாசனையும் தருவான் .
அனேக நேரங்களில் ,
மனைவியையே பலாத்காரம் செய்த முதல்
கணவன் நீயாகத்தான் இருக்க முடியும் .
பல முறை சொல்லியும்
எனது மூக்கும் கேட்டகவில்லை உனது வாயும் கேட்க்கவில்லை
புல் (ஆல்கஹால் )ஆனாலும் புருஷன் என மாற்றிக்கொண்டேன்!

Comments

  1. //மனைவியையே பலாத்காரம் செய்த முதல்
    கணவன் நீயாகத்தான் இருக்க முடியும் //.
    மனைவிகளைக் கேட்டால் தெரியும்,எத்தனை கணவர்கள் அப்படிப் பட்டவர்கள் என்று!
    நன்று.

    ReplyDelete
  2. உணர்வு பூர்வமான கவிதை...ஆனால் தலைப்பு மட்டும் இன்னும் நீங்க யோசிசிருக்கலாம்னு எனக்கு தோணுது....

    ReplyDelete
  3. settings இல் wordverification option மட்டும் எடுத்துருங்க..இன்னும் கமெண்ட்ஸ் போட எங்களுக்கு ஈஸி ஆ இருக்கும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்