சமூக ஜனநாயகம் உருவாகாமல் அரசியல் தாக்கத்தில் பெரும்பான்மையின் அழுத்தங்களை குறைக்க முடியாது , இந்தியாவைப் பொறுத்தவரையில் சமூக ஜனநாயகம் உருவாவதற்கு இங்கு இருக்கும் பிரிவினைகளின் சிக்கல்களை தீர்த்தாக வேண்டும், இனம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து சாதி உட்பிரிவுகள் என ஆயிரக்கணக்கான பிரிவினைகளை ஒன்று கூட்டாமல் சமூக ஜனநாயகம் சாத்தியம் இல்லை.
சமூக ஜனநாயகம் சாத்தியமில்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒருபோதும் சாத்தியமில்லை அங்கு பெரும்பான்மையே நிலை நிறுத்தி இருக்கும்
இந்தியா என்று ஒன்று கூடி இந்த ஆசிய துணை கண்டத்தில் சொல்ல ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகியும் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது ,அதேபோல் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டும் தமிழ்நாடு பொருத்தவரையில் மொழியால் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது..... இதுவரையில் மொழி ஒரு தனிமனிதனுக்கு எந்த விதத்தில் நன்மை பயக்குறது என தெரியவில்லை, அல்லது ஒரு சமூகத்திற்கு என்ன பயனை தருகிறது எனவும் தெரியவில்லை மொழி என்பது அடையாளம் அல்ல இந்த பிரபஞ்சத்தில் உயிர் என்பதைத் தவிர ஒன்று கூடலுக்கு வேறு எந்த அடையாளங்களும் இல்லை என்பதே உண்மை... மொழி வெறும் தொடர்பு கருவி தான், ஒன்று கூடலுக்கு உயிர் மனிதம் மனிதநேயம் என்பதை தாண்டி எந்த அடையாளத்துக்குள் சென்றாலும் அது பிரிவினையின் தோற்றுவாயாக தான் இருக்கும் அது பெரும்பான்மை சிறுபான்மை என்ற தோற்றப் பிழைகளுக்குள் கொண்டு செல்லும் சாத்தியக்கூறுகளே அதிகம்.
மொழி மனித உறவுகளுக்கு இடையே பரிச தொடுதல்களுக்கு இடையே தடையாக இருக்கும் பட்சத்தில் உடைக்கப்பட வேண்டியது தான்.
Comments
Post a Comment