Skip to main content

வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும்













அன்பைப் போல் அதிகாரம் செலுத்துவது ஒன்றுமில்லை
கொடியதுமதுதான்,
அது எதிர்பார்பதில்லை 
தன்னையே வருத்திக்கொள்ளும் 
தன் தேவைகளுக்காய் செய்யாமல் தருவதிலேயே இன்பம்காணும் 
செய்வது கர்வமெனினும் எதிர் பார்ப்புகள் இல்லாததால் அன்பாகிறது இன்பமாகிறது 
அழும் அழவைக்காது.
நேசித்து பாருங்கள் அதை விட அழகானது ஒன்றுமில்லை 
உள்ளே நரம்பின் அணுக்களில் குடையும் 
வாழத்தொன்றும் ,வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும் 
பைத்தியத்தின் முத்திய நிலை அன்புதான் 
அது தெய்வீகமானது ,கிறுக்கு மிகவும் உயர்ந்தநிலையில் ஓன்று
ஒன்றின் மீது உள்ள பற்றோ ,ஆசையோ ,ஈர்ப்போ,கவர்ச்சியோ அல்ல 
காந்தம் போன்றது அன்பு அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் அரவணைக்கும் 
அதிகாரம் செலுத்தாது அபபடிசெலுத்துவது சுயனலமாகும் தொற்றுபோகும்.
கட்டுப்பாடுகள் இருக்காது கவலைகொள்ளாது கண்ணீரையே விரும்பும் 
அசிங்கம் தெரியாமல் காயத்தில்  வடியும் சலத்தை நக்கும் நாயைப் போன்றது அன்பு 
எதுவும் தெரியாது அதனால் தான் சொன்னேன் அன்பு பைத்தியமென்று 
உள்ளே நுழைந்து பாருங்கள் துக்கமேன்பதே இல்லை 
மொத்த தத்துவமும் அன்புதான் 
சேமிப்பு என்பது இல்லாமல் வாழ்ந்தோமானால் 
அன்றைக்கு தேவை யானதை (உணவு) அன்று உண்டுவாழ்ந்தால் 
தெய்வமாவோம் .
அழகை ரசித்து என்ன வாகப்போகிறது 
உண்டு மகிழ்ந்து என்ன 
புன்னகை என்பது மாயை வாழ தூண்டும் ஒரு உணர்வுதான் 
நான் உண்மையிலேயே என்னை நேசித்தால் மற்றவனையும் 
நேசிப்பேன்.
அன்புசெய்து ஒன்றுமாக போவதில்லைதான் அப்படி அன்பு 
செய்யவில்லை என்றால் நான் என்னை நேசிக்கவில்லை நான் என்தேவை
களுக்காக மட்டும் செய்யும் போது பொய்த்து விடுகிறது. 
காமம் எதற்கு அதனால் என்ன 
நாம்  வாழ்ந்துதான் என்னசெயகிறோம் செய்யப்போகிறோம் 
இது வெறுப்பல்ல பொதுவுடைமையின் தாக்கம் அன்பின் மறுவுருவம் 



Comments

  1. கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு

    ReplyDelete
  2. யோசிக்கவேண்டிய அழகான விஷயம் நன்றி....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது