அன்பைப் போல் அதிகாரம் செலுத்துவது ஒன்றுமில்லை
கொடியதுமதுதான்,
அது எதிர்பார்பதில்லை
தன்னையே வருத்திக்கொள்ளும்
தன் தேவைகளுக்காய் செய்யாமல் தருவதிலேயே இன்பம்காணும்
செய்வது கர்வமெனினும் எதிர் பார்ப்புகள் இல்லாததால் அன்பாகிறது இன்பமாகிறது
அழும் அழவைக்காது.
நேசித்து பாருங்கள் அதை விட அழகானது ஒன்றுமில்லை
உள்ளே நரம்பின் அணுக்களில் குடையும்
வாழத்தொன்றும் ,வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும்
பைத்தியத்தின் முத்திய நிலை அன்புதான்
அது தெய்வீகமானது ,கிறுக்கு மிகவும் உயர்ந்தநிலையில் ஓன்று
ஒன்றின் மீது உள்ள பற்றோ ,ஆசையோ ,ஈர்ப்போ,கவர்ச்சியோ அல்ல
காந்தம் போன்றது அன்பு அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் அரவணைக்கும்
அதிகாரம் செலுத்தாது அபபடிசெலுத்துவது சுயனலமாகும் தொற்றுபோகும்.
கட்டுப்பாடுகள் இருக்காது கவலைகொள்ளாது கண்ணீரையே விரும்பும்
அசிங்கம் தெரியாமல் காயத்தில் வடியும் சலத்தை நக்கும் நாயைப் போன்றது அன்பு
எதுவும் தெரியாது அதனால் தான் சொன்னேன் அன்பு பைத்தியமென்று
உள்ளே நுழைந்து பாருங்கள் துக்கமேன்பதே இல்லை
மொத்த தத்துவமும் அன்புதான்
சேமிப்பு என்பது இல்லாமல் வாழ்ந்தோமானால்
அன்றைக்கு தேவை யானதை (உணவு) அன்று உண்டுவாழ்ந்தால்
தெய்வமாவோம் .
அழகை ரசித்து என்ன வாகப்போகிறது
உண்டு மகிழ்ந்து என்ன
புன்னகை என்பது மாயை வாழ தூண்டும் ஒரு உணர்வுதான்
நான் உண்மையிலேயே என்னை நேசித்தால் மற்றவனையும்
நேசிப்பேன்.
அன்புசெய்து ஒன்றுமாக போவதில்லைதான் அப்படி அன்பு
செய்யவில்லை என்றால் நான் என்னை நேசிக்கவில்லை நான் என்தேவை
களுக்காக மட்டும் செய்யும் போது பொய்த்து விடுகிறது.
காமம் எதற்கு அதனால் என்ன
நாம் வாழ்ந்துதான் என்னசெயகிறோம் செய்யப்போகிறோம்
இது வெறுப்பல்ல பொதுவுடைமையின் தாக்கம் அன்பின் மறுவுருவம்

கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு
ReplyDeleteயோசிக்கவேண்டிய அழகான விஷயம் நன்றி....
ReplyDelete