Skip to main content

1940

யூதர்களே 1940 களில் உங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறையை எதிர்த்து பாஸிஸ்ட்டுகள், நாஜிக்கள், போர் வெறியர்கள் தவிர்த்து ஜனநாயகத்தை, சமாதானத்தை விரும்பிய வர்களின் உலகமே உங்கள் பக்கம் நின்றது. 

நீங்கள் 60 லட்சம் பேர் பாசிச ஆரிய இன வெறியால் மிகக்கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டீர்கள்.. அந்த துயரை உங்களோடு சேர்ந்து உலகமே அனுபவித்தது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கணக்கான திரைபடங்கள் லட்சோப லட்ச கண்டனங்கள். உங்களை இன்னலிலிருந்து மீட்க எத்தனை ஆயிரம் நேசப்படைகள் தங்கள் இன்னுயிரை தந்து உங்களில் எஞ்சியவர்களை மீட்டனர் என்பதை மறந்த சமூகமாக மாறிவிட்டீர்களே இது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம், 

பல ஆயிரம் ஆண்டுகளாக நாடற்று பல நாடுகளில் உங்களை தக்க வைத்துகொண்ட வரலாறுகளை மறந்துவிட்டீர்களா? இரண்டாம் உலகப் போரின் முடிவு நேசப்படைகளுக்கு சாதகமாக அமையாமல் போயிருந்தால் யூதர்களின் இருப்பு இந்த பூமியில் என்னவாக இருந்திருக்கும்? இந்த வரலாற்றுக் கேள்வி எவ்வளவு பயங்கரமானது

(உங்களுக்கு விடுதலை தர வந்த யூதர்களின் அரசன் என்று தன்னை சொல்லிக்கொண்ட இயேசுவால் முடியாததை) 1947ல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக பாலஸ்தீனத்தின் 56% நிலத்தை தனியாகப் பிரித்து உங்களை அதில் குடியேற்றம் செய்து அதற்கு இஸ்ரேல் என பெயரிட்டதை சனநாயக மாண்புள்ள அன்றைய இந்தியா அதை எதிர்த்தது வரலாறு. ஆனால் 1950ல் அதை அங்கீகரித்தது என்பதும் வரலாறு. 

அந்த காலம் முதலே நீங்களும் இன வெறியாளர்களாக மாறிவிட்ட அநீதியை உங்களால் உணர முடிகிறதா இல்லையா? உங்கள் வரலாற்று துயரத்தை 1934- 1945 பொறுக்க முடியாத லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாக நானும் கூட ஒரு முழு நாவலையே மரப்பாலம் எழுதியிருக்கிறேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கிற நாவலிலும் அந்த துயரங்களை பதிவு செய்திருக்கிறேன். என்கிற ஆதங்கத்தில் என்னால் கேட்க முடியும். 

வரலாற்று காலம் முதலே அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனியரை அழித்தொழிக்கும் இன வெறியர்களாக நீங்கள் மாறியது சரியா? பல்லாயிரம் பாலஸ்தீனியரை கொன்று, பல நூறு கிராமங்களை அழித்து, பாலாஸ்தீனத்தின் 78% நிலபரப்பை உங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டது சரியா? தற்போது வெறும் 7 சதுர கிமீ எல்லைக்குள் பாலாஸ்தீனியரை முடக்கியது நியாயமா? 2008க்கு பிறகான தாக்குதலில் மட்டும் ஏறக்குறைய 1.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற சுதந்திர நாட்டை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபை பாலாஸ்தீனத்துக்கான நியாயத்தை வழங்குவதில் என்ன நியாயமாய் நடந்திருக்கிறது. வளைகுடா பகுதியின் ரவுடியாக இஸ்ரேல் மாறியிருக்கிறது அதற்கு அமெரிக்கா உடந்தை. 

இப்போது நடக்கும் சண்டையில் போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவது, நிவாரணமுகாம்கள் மீது குண்டு வீசுவது, மருத்துவ ஆம்புலான்சுகள் மீது குண்டுகள் வீசுவது…. பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பையும் சேர்த்து அகண்ட இஸ்ரேல் என அறிவிப்பது இதெல்லாம் வரலாற்று பிழை இல்லையா?  இதற்க்கெல்லாம் போர் தீர்வா? அப்பாவி மக்கள் இருபக்கத்திலும் கொல்லப்படுகிறார்கள். போருக்கு வெளியே உள்ள மக்கள் நிலைமைகளை சரியாக புரிந்துக்கொள்வதன் மூலம் நியாயத்தின் பக்கம் உலகம் அணி திரள வேண்டும் போர் நின்று சமாதனத்துடன் நியாயங்களும் சனநாயக வழியில் தீர்க்கப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்