ஒரு கூட்ட மக்களை அன்றே திசைத் திருப்புவது , வயப்படுத்துவதாவது அன்றைய சூழலியல் நடைமுறை எதார்த்த மக்கள் கூட்ட எண்ண முடிவினை தேர்ந்தெடுப்பதில் நிலைகொண்டுள்ளது , எனினும் எதிர்கால கருத்தியலுடன் முரன்படும் நிகழ்கால எதார்த்த நடவடிக்கை நடைமுறை இன்றைய செயல்களின் எதிர் மனநிலையாகவே கடந்து போவதாய் தோன்றும் , மக்கள் கூட்டத்தின் மனநிலையும் சற்றே இருப்பிலேயே தேங்க நேரிடும் எதிர்கால திட்டத்தை வரை கோடுகளை அதின் மைய பிரச்சனைகளை தொடர்ந்து கையில் எடுப்பதின் மூலமே நிகழ்கால கருத்தியலின் சிதைவின் ஒரு பகுதியாவது நம் எதிர்கால கட்டமைப்புக்குள் நகரும். புரிதலுக்கு முன்னும் பின்னுமான நம் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய செயல்படுகளின் மாற்றம் தேவையாகிறது ஒரு கூட்ட மக்களை புரிதலுக்கு உட்படுத்துவது நிலைகொண்டுள்ள கருத்தியலின் மறைமுரனை வெளிக்கொணர்வதும் உணர்ச்சி உணர்வுபூர்வமான அரசியல் தலையிட்டினை தகர்ப்பதிலும், மைய்ப்பட்ட மன நிலையில் இந்திய பரப்பை கருத்தியலின் தாக்கத்துக்கு கொணர பிரிவினையின் சிதைவு அவசியமாகிறது எனவே முதல் தேவை மனித உள் முரன்களை களையும் மைய எண்ண ஓட்ட செயல்பாடே .
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Comments
Post a Comment