அவள் வரும் சின்னஞ்சிறு பாதையில்
அக்குறுகிய நேரத்தில்
முத்தமிட நினைக்கையிலேயே
பாதையோ முடிவடைந்து விடுகிறது ,
ஒரு தனியறையில்
முதலாய் அவள் வாசமும்
ஸ்பரிச தொடுதளிலும்
சலனம் இல்லாமல் சப்தம் இறந்து விடுகிறது
முத்தத்தின் இசை மட்டும்
வளர்ந்து கொண்டே இருக்கிறது
Comments
Post a Comment