கீதையுடன் கொண்ட உறவில் நான் அதைப்பற்றி அதிகமாக அறியமுடிந்தது ,அதன் உள்ளே முழுவதும் செல்ல வழிகிடைத்தது
அதனுடைய முக்கிய போதனையான.போதனை முறையான அர்ஜுனன் எதிரிகளை கொல்ல முற்படுதல்.
வேண்டுமா? வேண்டாமா? இத்தனை உயிர்களை பழிவாங்கி வாழவேண்டுமா ?
தான் ஒன்றுமில்லை என்பதும் ,வாழ்வு அதாவது ராஜ்யபாரம் கிடைத்துத்தான் என்ன பயன் என்றும் அர்ஜுனன் எண்ணியிருக்க வேண்டும்
அர்ஜுனன் ஒரு தெளிந்த தத்துவ நோக்கில் வாழ்வை பார்த்துள்ளான்.ஆனால் கிருஷ்ணன் கூறுவது தன்னை நம்பியவர்களை பற்றிதான்.
ஆகவே கிருச்னனுடைய பார்வை சதை அல்லது உலகை சந்தோசத்தை பற்றியதாக உள்ளது. தப்பில்லைதான் இருப்பினும் கூட இந்த கீதையானது
உலக வாழ்வில் சாதிக்கவே கற்ப்பிக்கிறது காரணம் ஒழுக்கத்தை பற்றி குறிப்பிடுகிறது.உபநிசத்தில் ஞானிகள் ஒழுக்கத்தை குறிப்பிடவேயில்லை
அப்படியிருக்க கீதை உபநிசத்தை கறந்து தருகிறது என்பதில் ஞாயமில்லை. சோ என்னனா கீதை ஒரு வாழ்க்கை அதாவது கட்டுப்பாடான ஒரு சமுதாயத்தை
உருவாக்க இடையில் செருகப்பட்டது.மற்றும் உபநிச தொடர்புடையது என கூறவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவுமே பயன்படுத்தியிருக்கிராகள்
ஆண் ஒருவனுக்கு எத்தனையும் மனைவிகள் இருக்கலாம் பெண்ணுக்கோ ஒருவன்தான் எனும்போதே ஆணாதிக்க கீதை புரிகிறது.கடவுள் பெண்ணும் ஆணுமாக இருப்பதில்லை மாறாக ஆணும் பெண்ணுமாக இருக்கிறார்.தான் வாழ வேண்ண்டுமெனில் எதிரிகளை கொல்ல வேண்டும் என்ற எளிய தத்துவத்தை கூறவே இத்தனை கதைகள் வடிக்கப் பட்டுள்ளது. இங்கே பலனை எதிர்பார்த்தொமனால் போரிடமுடியாது,இதனாழவே கடமையை செய் பலனில் விருப்பத்தை விட்டு விடு என்று பிதற்றுகிறது.வாழ்வில் பலனில் விருப்பத்தை விட்டோமெனில் மனிதஇனம் இவ்வளவுதூரம் வந்திருக்காது.
என்றோ அழிந்திருக்கும்.தத்துவங்கள் அதிகரித்தாலும் மனித இனம் சிக்கிம் அழிந்து விடும்.
இயற்கையுடன் இணைந்து வாழுங்கள் செய்ய தொன்று வதையெல்லாம் செய்யுங்கள்.
குழப்பத்தின் உயர்ந்த பகுதி தான் மதம். பயத்தின் முனங்கள் என்றும் கூறலாம்.
இன்னும் உடல் சம்பந்த பட்ட விசயங்களையும் கீதை கூறுகிறது !
சுவாசமும் மனமும்.

Comments
Post a Comment